google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நூறு கொடுத்தால்.....

Friday, May 18, 2012

நூறு கொடுத்தால்.....


நித்யானந்தரின் பேட்டி
ஒரு தொலைகாட்சியில்…..
கேள்வியாளரின் கேள்வி-
"இந்த சிறு வயதில்
ஐயாயிரம் கோடி சொத்து
எப்படி சாமி சேர்த்தது?
அதற்கோ அவர்-
ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம்,
அவருடைய ORGANIZATION(மடம்?)-
ஆய்வு செய்து பாராட்டியது!
நூறு ரூபாய் வாங்கினால்
அதை நூற்றி இருபத்தி எட்டாக
கொடுப்பாராம் சமுதாயத்துக்கு

 (நிதி நிறுவனங்களின் மோசடியைவிட
இது நல்ல செயல் அல்லவா!).
இனி மூடிவிடலாமா வங்கிகளை

அடுத்த கேள்வி-
"நிறைய மடாதிபதிகள்
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
ஆனால் அவர்களது
ஆசிரமங்கள் மட்டும்
அடுத்த மாநிலங்களில்...
அவர் உட்பட அது ஏன்?"
அதற்கோ அவர்-
தமிழ்நாட்டில் நாத்திகர்கள்
அறுபது ஆண்டுகளாக
அடித்து விரட்டுகிறார்களாம்?

(அருமையான பதில்?
அவர் எப்படி மதுரை வந்தார்?
இன்னும் கொஞ்சம்
அந்த பேட்டியை  கேட்டிருந்தால்
போகவேண்டியது நான் கீழ்பாக்கத்துக்கு.... 
இன்னும்மொன்று தெரியுமா உமக்கு?
அன்றைய நாளிரவு படம் ஓடியதும்
அதே தொலைக்காட்சியில்தான்...
இன்று வாழ்த்து சொன்னதும்
அதே வசந்த் தொலைக்காட்சிக்குத்தான்)    



     
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1