இந்த நாட்டுக்கு பிறக்க வேண்டிய
இன்னொரு மகாத்மாவை
இல்லாமல் செய்யாதீர்கள்
அன்புக்கு அடையாளமான
அன்னை தெரசா போன்று
இன்னொரு ஆத்மாவை
இல்லாமல் செய்யாதீர்கள்
கல்வியறிவே இந்த நாட்டை
கரைசேர்க்குமென்று
கலங்கரைவிளக்காய் இருந்த
கர்மவீரர் காமராஜ் போன்று
உருவாகவேண்டிய பிறப்புகளை
கருவிலேயே அழித்துவிடாதீர்கள்
இந்த நாட்டுக்கு இந்த மக்களுக்கு
அவதாரப்புருசர்களாக
அவதரிக்க வேண்டியவர்களை
அழித்துவிடாதீர்கள் கருவிலே
ஆசையை அடக்க வேண்டும்
அளவில்லா குழந்தை பிறப்பை
அணைகட்டி தடுக்க வேண்டும்
இப்படித்தான் இருந்து விட்டால்
இருக்காதே குப்பைத்தொட்டி குழந்தைகளும்
இருக்காதே தொட்டில் குழந்தைகளும்
இருக்காதே அநாதை குழந்தைகளும்
காமக்கொடுரர்களாலும்
கயமை அரக்கரகளாலும்
கற்ப்பிழந்து காயம்பட்டோர்
கருவை காக்க தேவையில்லை
நயவஞ்சகர்களின் வித்து
நாட்டுக்கு தேவை இல்லை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |