google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சொல்லுங்கள் மனிதர்களே!

Sunday, June 10, 2012

சொல்லுங்கள் மனிதர்களே!






செய்த கொடுமைகள்என்ன?
சொல்லுங்கள் மனிதர்களே!

பணத்துக்காக எதையும் செய்யும்
கூலிப்படை கொலைகாரர்கள்
இல்லவே இல்லை நாங்கள்

வஞ்சகம் வாயில் கொண்டு  
நஞ்சகம் நெஞ்சில் கொண்டு
நாட்டாமை செய்யும் நீதிமான்கள்  
இல்லவே இல்லை நாங்கள்

பதவிக்காக பல்லைக்காட்டி
பதவி வந்ததும் பவுசு காட்டி   
பதவி தந்தவர்களையே
பலிவாங்கும் எத்தர்கள்
இல்லவே இல்லை நாங்கள்

மதமென்ற போர்வையில்
மறைந்துகொண்டு
மனிதாபிமானத்தை விட்டவர்கள்   
இல்லவே இல்லை நாங்கள்

நாட்டுசொத்தை சுரண்டிஎடுத்து   
சுவிஸ் வங்கியில் பதுக்கிகொண்டு
சுகவாசியாய் வாழ்வோர்கள்
இல்லவே இல்லை நாங்கள்

அறியா குழந்தைகளை
அடித்து உதைத்து உணமாக்கி
பிச்சை எடுக்கவைத்து பிழைக்கும்
எச்சப்பதர்களோ பித்தர்களோ
இல்லவே இல்லை நாங்கள்

எங்களைப்போய் மிருகங்கள்
என்றுரைக்கும் மனிதர்களே!
உங்களைப்போல் நாங்கள்
செய்த கொடுமைகள்என்ன?
சொல்லுங்கள் மனிதர்களே!


    




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1