google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடவுள் என்னிடம் பேசினார்

Sunday, June 10, 2012

கடவுள் என்னிடம் பேசினார்


கடவுள் என்னிடம் பேசினார்
என் கவிதைகளை படித்து  
கருத்திட வந்தேன் என்றார்

அதற்குள் வந்தது
அவரது கைபேசியில்
ஆயிரம் கோடி அழைப்புகள்

காப்பாற்று கடவுளே! காப்பாற்று!
என்று கேட்ட குரல்களோ சில

அதைக்கொடு இதைக்கொடு
அள்ளிக்கொடு பணம்!
என்று கேட்ட குரல்களோ பல

எல்லோரையும் வாழ வை
என்று கேட்டது ஒரு குரல்
எல்லோரும் என்றது
அவர் குடும்பத்திலுள்ள
எல்லோரையும் என்பது
அப்புறம்தான் தெரிந்தது
அந்த கடவுளுக்கே!

இன்னும் பலகோடி வந்தன
இமெயிலும் எஸ்.எம்.எஸ்.களும்

அதற்குள் வந்தது அவசர அழைப்பு
அது ஆதினமோ?அல்லது யாரோ?
அது தெரியாது எனக்கு  

எல்லோருக்கும் நல்லது செய்யவே 
நேரமில்லை  எனக்கு......
கவிதைகளா? கிறுக்கல்களா?
அப்புறம் சொல்கிறேன் கருத்து
அவசர வேலை இருக்கென்று  
என் மடிக்கணணியுடன்  
மறைந்தே போனார் கடவுள் 






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1