உழலின் ஆணிவேரை
அசைத்துப்பார்க்கும்
அசைத்துப்பார்க்கும்
அய்யா அன்னா ஹசாரே!
பாதாளம் வரை வேருன்றியிருக்கும்
அதன் ஆணிவேரை எளிதில்
தேசபிதாவின் செல்ல மகனே!
செல்லரிதுக்கிடக்கும் இத்தேசத்தை
சீர் செய்ய வந்தவரே!
இந்திய ஊழல்வாதிகள்
பச்சோந்தியைவிட மோசமானவர்கள்
எங்கும் இருப்பார்கள் எதிலும் இருப்பார்கள்
அசந்தால் உமது அருகிலும் இருப்பார்கள்
இந்த தேசத்துக்கு விடுதலை வாங்க
மக்களிடம்தான் கையேந்தினார் மகாத்மா!
அவர்தம் சீடராய் நீவீர்
உண்ணாவிரதமிருந்து
ஊழல்வாதிகளை உணரச்செய்தீர்!
இன்னும் போகலாமே பாதயாத்திரை
இலஞ்சம் கொடாதீர் என்று
இயம்பலாமே மக்களுக்கு....
வெற்றி வழிகள் தெரியாதா
இராணுவ வீரரான உமக்கு?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |