google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அன்னா ஹசாரேவுக்கு ஒர் அன்புக்கடிதம்

Tuesday, June 05, 2012

அன்னா ஹசாரேவுக்கு ஒர் அன்புக்கடிதம்


உழலின் ஆணிவேரை 
அசைத்துப்பார்க்கும்
அய்யா அன்னா ஹசாரே!
பாதாளம் வரை வேருன்றியிருக்கும்
அதன் ஆணிவேரை எளிதில்  
அழிக்கத்தான் முடியுமா உம்மால்?

தேசபிதாவின் செல்ல மகனே!
செல்லரிதுக்கிடக்கும் இத்தேசத்தை
சீர் செய்ய வந்தவரே!
இந்திய ஊழல்வாதிகள்
பச்சோந்தியைவிட மோசமானவர்கள்
எங்கும் இருப்பார்கள் எதிலும் இருப்பார்கள்
அசந்தால் உமது அருகிலும் இருப்பார்கள்  

இந்த தேசத்துக்கு விடுதலை வாங்க
மக்களிடம்தான் கையேந்தினார் மகாத்மா!
அவர்தம் சீடராய் நீவீர்
உண்ணாவிரதமிருந்து
ஊழல்வாதிகளை உணரச்செய்தீர்!
இன்னும் போகலாமே பாதயாத்திரை
இலஞ்சம் கொடாதீர் என்று   
இயம்பலாமே மக்களுக்கு....
வெற்றி வழிகள் தெரியாதா
இராணுவ வீரரான உமக்கு?



  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1