google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்றுதான் மாறுவீரோ?

Tuesday, June 05, 2012

என்றுதான் மாறுவீரோ?


நாளெல்லாம் இவர்கள்
நல்லவர்களாயிட்டால்
உலக நாடுகளில் என்றும்
இமயமாய் இந்தியா இருந்திடுமே
இனிதாய் நாமும் இருந்திடுவோமே  

உள்நாட்டில் சுரண்டியதை
வெளிநாட்டில் பதுக்கும்
கள்ளப்பனக்காரர்களே!
வாரித்தான் வழங்கவேண்டாம்
வள்ளல்களாய் நீங்கள்
பதுக்குவதை நிறுத்திவிட்டாலே
பெருகிடுமே வளம் நாட்டில்.

மக்களே மன்னர்கள் என்று
வாக்குகளை விலைபேசி
மக்களை மயங்கச்செய்து  
மந்திரிகளான மன்னர்களே  
ஆதாயம் உங்களுக்கு தேடாமல்
ஆதாயம் மக்களுக்கு தேடினால்
ஆகிவிடுமே இந்தியா அன்றே  
அதிசய ஜனநாயக நாடென்று.

எம்மதமும் சம்மதமென்று
எவரும்தான் வாழ்வதில்லை
மதம்பிடித்த யானைகளாய்
மாறிவிட்ட மதவாதிகள்
எம் மதம் இந்தியாவே
என்று மாறமாட்டீரோ?
என்றுதான் மாறுவீரோ?
அன்றுதான் மாறிடுமே
அனைத்தும் இந்திய நாட்டினிலே
        

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1