இந்தியாவின்
மிகப்பெரிய
நாற்காலி
அமர்ந்திருக்கலாம்
சிகப்பு கம்பள
வரவேற்பில்
சுற்றி வரலாம்
உலகத்தை
இதற்க்குத்தானோ
இவ்வளவு பெரிய
போட்டி
இந்த பெரிய
நாற்காலிக்கு
அவ்வப்போது
அசையும் ஆடும்
ஆடுவது நாற்காலி
மட்டுமே
அமர்ந்திருப்பவர்
இருப்பார்
அப்படியே பொம்மைபோல
அசைப்பதும்
ஆட்டுவதும்
அமர்ந்திருப்பவர்
அல்ல
அரசியல்வாதிகள்
அதனால்தானோ
ஒருமுறை அமர்ந்தவருக்கு
மறுமுறை அமர்வதற்கு
மனசாட்சி
மறுக்கிறது
ஆனாலும்
மிகப்பெரிய
போட்டி
மிகப்பெரிய
நாற்காலிக்கு
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |