நாமிருவர் நமக்கிருவர்
காலம் தொட்டு காதல் செய்து...
ஆண் அய்வர் பெண் அய்வர்
ஆண்டவன் தந்ததாக பெற்றெடுத்து
அரசனாக இருந்தவன் ஆண்டியான
ஒரு இல்லற ஞானியின் கதை.....
பசுமை புரட்சிபோல்
குழந்தை புரட்சி செய்தேன்
அவர்கள் வளர்ந்தபோதும்
அவர்கள் மனவாழ்வின்போதும்
அதுவாங்க இதுவாங்கவென்றும்
அரண்மனைபோலிருந்த வீட்டை விற்று
வாடகை வீட்டில் வாடிக்கிடக்கிறேன்
எல்லோரும் போய்விட்டார்கள் நலமாக
எல்லோரும் வாழ்கிறார்கள் வளமாக
எவருமில்லை என்னைப்போல் ஞானப்பழமாக
என்னவளும் நானும் தனிமரமாக
எங்கள் வாழ்வும் ஆனதே ஒய்ந்த புளிமரமாக
ஆனாலும் ஆனந்தமே அதுவும் பேரானந்தமே!
*********************************************
காணொளி-புத்திசிகாமணி பெத்த பிள்ளை....
*********************************************
காணொளி-புத்திசிகாமணி பெத்த பிள்ளை....
Thanks-YouTube-Uploaded by goldtreat on Jan 7, 2012
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |