பாலகர் கதை என்று
பாரினில் உலவுகிறது
‘பஞ்ச தந்திர கதைகள்’
அவைகள்
பஞ்ச தந்திர கதைகளல்ல
வஞ்சக தந்திர கதைகள்
தம்உயர்வை நிலைநாட்ட
தந்திரமாய் உயர் சாதியினர்
தரம்கெட்டு எழுதிய கதைகளே
சாதீய கதைகள்
பஞ்ச தந்திர கதைகள்
உயர் சாதியினரின்
வஞ்சக தந்திர கதைகளே!
தாழ்ந்தோரின்
தோளில் ஏறித்தான்
உயர்ந்தோர்கள்
உயரப்போனார்களோ?
இப்படித்தான்
ஆயிரம் கதைகள் கட்டி
ஆண்டவனை காட்டினார்களோ?
ஆண்டவன் அருகில் இருப்பதாக
அவர்கள் தம்மை காட்டிக்கொண்டு
உயர்ந்தவர்கள் நாங்கள் என்று
உலகுக்கு உரைத்தனரோ?
அறிவு கொண்டு சிந்தித்தால்
அத்தனையும் பொய்யாகும்
அவர்தம் வாழ்வும் தீயாகும்
*****************************
காணொளி-கேளடா
மானிடரே....
Thanks-YouTube-Uploaded by Arulan78 on Feb 21, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |