google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பஞ்சதந்திரம் கதையா? சதியா?

Friday, July 27, 2012

பஞ்சதந்திரம் கதையா? சதியா?




பாலகர் கதை என்று
பாரினில் உலவுகிறது
‘பஞ்ச தந்திர கதைகள்  
அவைகள்
பஞ்ச தந்திர கதைகளல்ல
வஞ்சக தந்திர கதைகள்

தம்உயர்வை நிலைநாட்ட
தந்திரமாய் உயர் சாதியினர்
தரம்கெட்டு எழுதிய கதைகளே
சாதீய கதைகள்

பஞ்ச தந்திர கதைகள்
உயர் சாதியினரின்
வஞ்சக தந்திர கதைகளே!

தாழ்ந்தோரின்
தோளில் ஏறித்தான்
உயர்ந்தோர்கள்
உயரப்போனார்களோ?

இப்படித்தான்
ஆயிரம் கதைகள் கட்டி
ஆண்டவனை காட்டினார்களோ?
ஆண்டவன் அருகில் இருப்பதாக
அவர்கள் தம்மை காட்டிக்கொண்டு  
உயர்ந்தவர்கள் நாங்கள் என்று
உலகுக்கு உரைத்தனரோ?

அறிவு கொண்டு சிந்தித்தால்
அத்தனையும் பொய்யாகும்
அவர்தம் வாழ்வும் தீயாகும்  
*****************************
காணொளி-கேளடா மானிடரே.... 


Thanks-YouTube-Uploaded by on Feb 21, 2010



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1