அபய முத்திரையை
அணிந்து கொள்ளுங்கள்
அதோ வருகிறது
சுனாமி......
அன்று வந்த சுனாமி
அள்ளிக்கொண்டு போனதே
ஆயிரமாயிரம் உயிர்களை
அவர்களில் யாரும்
அணியவில்லையோ
அந்த அபய முத்திரையை?
அன்று காத்திடவில்லையே
அந்த அபய முத்திரை?
இயற்கையை படைத்தவன்
இறைவன் என்றால்
சுனாமியை படைத்த
சுந்தரப்புருசன் யாரோ?
வீட்டில் வைத்து
ஊதுபத்தி கொளுத்துங்கள்
அல்லது உங்கள் வீட்டையே
ஊதுபத்தியாக கொளுத்துங்கள்
அது அவரவர் நம்பிக்கை
நாட்டில் கொளுத்தி
நாசப்படுத்தாதீர்கள்
நாட்டுக்கு தேவை
நியாய முத்திரை
அதுவே தேர்தல் முத்திரை
அபய முத்திரை என்றும்
அபாய முத்திரை....
என்று தீருமோ உமது நித்திரை?
**********************************
காணொளி-கடவுள் செய்த பாவம்....
Thanks-YouTube-Uploaded by MultiAbdulgafoor on Feb 27, 2012
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |