பள்ளிச் சிறுமியின்
உயிரைக் குடித்தது
பேருந்து ஓட்டை
காவல்துறை
துவக்கியது விசாரணை
அரசு வழங்கியது
நிவாரணம்
நீதித்துறை
விழித்துக்கொண்டு
ஆணையிட்டது
ஓட்டை
பேருந்தில்
மட்டுமா?
இந்த நாடு
ஓட்டைகள் நிறைந்த
ஒரு சல்லடைச் சட்டை
ஊழலேனும்
குத்தீட்டியால்
ஓட்டை
போட்டவர்கள் யார்?
ஓட்டைதான் போட்டு
ஓலமிடுகின்றாரே!
நாட்டைதான்
சீரழித்து
நீலிக்கண்ணீர் வடிக்கின்றாரே!
இந்த நாடு ஒரு
நாடகமேடை
இது ஒரு நல்ல
நாடகம்
இவர்கள் நல்ல
நடிகர்கள் *************************
காணொளி-NEWS.....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |