நீ
புதைக்கப்பட்டால்
வீரிய விதையாக
முளைத்து
விடுகிறாய்!
நீ
எரிக்கப்பட்டால்
பீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுகிறாய்!
உன்னை
விழுங்கியவர்கள்
அஜீர்ணத்தால்
அவஸ்த்தைப் படுவார்கள்
உன்னை
நினைக்க
மறந்தவர்கள்
நித்திரையை
தொலைத்து விடுவார்கள்
உன்னை
அழிக்க
நினைப்பவர்கள்
அம்மணமாக அலைவார்கள்
****************************
காணொளி-மௌனத்தில்.......
Thanks-YouTube-Uploaded by indhu420
on Aug 16, 2009
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |