google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குவாரியும் ஊழல் பெருச்சாளிகளும்

Friday, August 10, 2012

குவாரியும் ஊழல் பெருச்சாளிகளும்



அரசே.....
இது நியாயமா?

மண்ணைத் தோண்டி 
கல்லை எடுக்க
கோடிகள் பல
கொடுத்துதானே
அனுமதி வாங்கினோம்   
http://www.savvystone.com/images/granite/18.jpg
ஆழத் தோண்டியபோது
ஆர்வக் கோளாறில் 
அளவு தெரியாமல்
அதிகமாக தோண்டிவிட்டோம்

அது எப்படி குற்றமாகும்? 

அதற்கு போய் (சகாயம்)
சகாயம் காட்டாமல்
சங்கடம் செய்கிறீர்களே!




டுர்ர்ர்ர்ர்ர்....டமாரம்

மலை விழுங்கி
மகாதேவன்களே!
அதுவும் சரிதான் 


பொந்து தோண்டும்போது
பெருச்சாளி
அளவுகோல் வைத்து
அளந்து கொண்டா
தோண்டமுடியும்?  

மக்களுக்கு கேடு தரும்
மதுக்கடைகள் இங்கே
அரசுடமை ஆனது
அரசுக்கு ஆதாயம் தரும்
மண்ணும் கல்லும்.............
மயமானது தனியார்களிடம் 
மாயமானது தருதலைகளிடம்.



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1