Collapse by Gowsigan Sabanathan
அன்று எங்களை
ஆண்டவர்களும்
இன்று எங்களை
ஆளுபவர்களும்
ஆயிரமாயிரம்
நலத் திட்டங்களுக்காக
நட்டி வைத்த அடிக்கற்களை
அடுக்கி
வைத்தால்.....
ஆயிரம் பிரமிடுகள்
அழகாய் கட்டி விடலாம்
அவைகளை
படிக்கட்டுகளாக
பயன் படுத்தினால்
நிலவில் கூட
நடந்து போகலாம்
நிலவென்ன நிலவு?
நட்சத்திரங்களைக்கூட
நமுட்டிகிட்டு வரலாம்
அது சரி....
அடிக்கல் நட்டும்போது
பூமி பூஜை
போட்டார்களா?
புதிர் பூஜை
போட்டார்களா?
யாரிடம் கேட்பது?
அய்யா!
யாரடா இந்த மானிடப்
பூச்சி?
இங்கே வந்து
நச்சரிக்கிறது
என்று பார்க்கிறாயா?
அடிக்கல் நாட்டு
விழாவில்
அவர்கள் நட்டி வைத்த
அடிக்கல் ஓன்று மீது
ஏறி நின்று
எட்டிப்பார்த்தேன்
அய்யா! உன்னை நான்
கண்டுகொண்டேன்
உன்னிடம்
புலம்புகிறேன்
அவர்களிடம்
புலம்பினால்
அலம்புவார்கள்
சலம்புவார்கள்
இங்கிருந்து
காமராசர் என்பவர்
அங்கேதான் வந்தாராம்
மீண்டும்
அவரை இங்கே
அனுப்பி வை....
கல்லுக்கும் உயிர்
கொடுக்கும்
கர்ம வீரர் அவர்!
(இது ஒரு கற்பனை ஓட்டமே
ஆன்மீக குத்தலோ வத்தலோ
அல்ல
அரசியல் நக்கலோ
விக்கலோ அல்ல)
*************************************
காணொளி-nskrishnan comedy
Thanks-YouTube-Uploaded by egopal
on Mar 17, 2009
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |