Neenaivo oru paravai(guitar cover ) by SITHRAVEL_DREAMA
அன்று எனக்கு
வேலையும்
கிடைக்கவில்லை
வேலை கிடைத்ததும்
குல தெய்வத்துக்கு
பலியிட்டு
படையல் வைக்க
அப்பா வாங்கிவிட்ட
ஆட்டுக்கடா
ஆகக்கிழடாய்
ஆகிவிட்டது
அப்பாவும்
கவலையில்
காலமானார்
ஆட்டுக்கடாவும்
எங்கே போனது?
எதுவும் தெரியவில்லை
எனக்கு
வேலை கிடைத்தபோது
இரண்டு பேரும்
இல்லவே இல்லை
எப்போதாவது
ஊருக்குப்போனால்
உறவினர் தாத்தா
ஊளையிடுவார்
தெய்வக் குற்றம்
ஆகப்போகிறது
உடனே ஒரு கடா
கோயிலுக்கு
பலியிடு என்று
நானும்
ஆகட்டும் தாத்தா
அந்த கடா
கிடைக்கட்டும்
அப்புறம்
பலியிடலாம்
என்று
வந்துவிடுவேன்
காணொளி-Vijay TV...
Thanks-YouTube-Uploaded by piratheep007 on Sep 1, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |