சாதிக்கொரு தலைவர்கள்
கற்சிலைகளாக நிற்கும்
வீதிகளில் போகும்போது....
கண்ணை மூடிக்கொண்டு
கடந்து போய்விடுவேன்
நான் ஒரு பயந்தாங்கொள்ளி
சிலையாக நிற்ப்பவர்
எந்த சாதியோ?
நான் எந்த சாதியோ?
(அவர்கள் கேட்டார்களா
இறந்தபிறகு எங்களுக்கு
சிலை வையுங்கள் என்று?)
அருகில் போகும்போது
அவர் எதுவும் சொல்லமாட்டார்
அது தெரியும் எனக்கு
ஆனாலும்
நான் ஒரு பயந்தாங்கொள்ளி
காக்கை அமர்ந்து
பனம்பழம் விழுந்த
கதை போல்...
சிலை அருகில்
நான் போகும்போது
சரியில்லாத
சிமெண்டு கலவையால்
அவர் சேதாரமானால்...
அருகில் போனதால்
அவப்பெயர் வரலாம்
அதனால்
கலவரக் கொலையும்
காட்டுக் கொடூரமும்
கூத்தாடி வரலாம்
நான் ஒரு பயந்தாங்கொள்ளி
*****************************
காணொளி-Ondre maanthar Kulam
Thanks-YouTube-Published on Apr 19, 2012 by breezyawaaz
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |