அடோன்னா காரே-
மூன்று வயதிலிருந்து
முத்தாய்ப்பான ஓவியங்கள்
வரைந்தப் பெண் என்றால்
நம்ப முடியவில்லையா?
ஆனால் அதுதான் உண்மை!
பென்சில் அழிப்பான் கரிக்கோல்
அதுதான் அவரது ஆயுதங்கள்
ஓவியம் தீட்டும் தூரிகைகள்
கண்ணில் காணும்
விலங்குகள் மனிதர்கள்
அவர்களின் செயல்கள்
அதுவே ஓவியக்கருக்கள்
அவரது வரைபடங்கள்
திட்டமிடப்பட்டவைகள் அல்ல
நம் நிஜ உலகின் செயல்களை
நிதர்சனமாகச் சொல்லும்
அவர் அனுபவித்த அபத்தங்கள்
அவருடைய ஓவியங்கள்
குழந்தைகள் பெரியவர்கள்
கற்பனைகளை வளர்த்து
வேறு ஒரு உலகத்துக்கு
அழைத்துச் செல்லும் கவிதைகள்
அவருடைய ஓவியங்கள்
சாதாரண நிகழ்வுகளை
உயிரினங்களால் நடிக்க வைத்து
சொல்லப்படும் கதைகள்
Wins $200,000 Art Prize For 'Elephant'பள்ளி ஆசிரியையானஅவர் வரைந்த 'ELEPHANT' ஓவியம்அளவற்ற செல்வத்தைஅவருக்கு அளித்ததுThanks-YouTube-Uploaded by Candy Dougherty |
நானும் மூன்று வயதில்
வீட்டுச் சுவற்றில் போட்டேன்
கரிக்கோடுகள்.....
அம்மா முதுகில் போட்டாள்
மூன்று வரிக்கோடுகள்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |