google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டாஸ்மாக்கே பெரிய ரவுடி!

Thursday, October 18, 2012

டாஸ்மாக்கே பெரிய ரவுடி!



society

அங்கே இங்கே என்று
ஒழிவு மறைவாக அன்று
கள்ளச்சாராயம் குடித்தவர்கள்
வீதியில் உலாவினால்
வகையில்லாமல் உளறினால்
காவலர்கள் பதம் பார்ப்பார்கள்
இல்லையேல் இளித்துக்கொண்டு  
காவலர்கள் பணம் பார்ப்பார்கள்     

அரசு அனுமதியுடன் மதுபானக்கடைகள்
அதற்குப் பிறகு அரசே விற்பனை செய்யும்
டாஸ்மாக் மதுபானக்கடைகள்
வந்த நாள் முதல் இந்த நாள்வரை....
அது நாட்டுக்கு செய்தது
நன்மைகள் பல என்றேன்  
நண்பர் கோபித்து......
நானும் உளருவதாக நினைத்தார்

நகரத்திலிருக்கும் எங்கள் தெருவில்
நல்ல ரவுடிகள் நிறைய இருந்தனர்
இன்று அவர்கள் எங்கே போனார்கள்
என்று தெறியுமா..? என்றேன்
ஓன்று இரண்டு பேர்தான்
உலாவுகிரார்கள் உப்பு சப்பின்றி
மற்றவர்கள் எல்லாம்
மறைந்தார்கள் மண்ணுக்குள்
உபயம் மதுபானக்கடைகளே!
எல்லா ரவுடிகளையும் 
அடக்கிவிட்ட...அழித்துவிட்ட  
டாஸ்மாக்கே பெரிய ரவுடி! 
அடாங்காப்பிடாரிகளை அடக்க 
அரசு கொடுக்கும் அருமருந்து.     

நண்பரிடம் விளக்கும் போது
வீட்டுக்கு வெளியே...விபரீத சப்த்தம்
சன்னல் வெளியே எட்டிப்பார்த்தால்
இருந்தார்கள் சில இளம் ரவுடிகள்....
கூடம் கூட்டமாகக் கும்மாளம் போட்டு...

கூட்டிக் கழித்து
எப்படிக் கணக்கிட்டாலும்
என் கணக்குத் தப்பு!

பழைய ரவுடிகள் போனாலும்
புது ரவுடிகள் நிறைய
புறப்பட்டு வந்தார்கள்
புண்ணியம் டாஸ்மாக் கடைகளே!  


                     Thanks-YouTube-Uploaded by webdinam

 *************************************************************************
போதையில் 
 மனிதர்கள் மட்டுமல்ல 
பெரிய  மிருகங்களே...
தள்ளாடி  விழுகின்றன 
வாயை பிளக்கின்றன 
யானையும்  பூனையாகிறது 
விபரீதமான வேடிக்கை 



                                                Thanks-YouTube-Uploaded by stopchiyski


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1