google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உழைத்து வாழும் உயிர்கள்!

Wednesday, October 31, 2012

உழைத்து வாழும் உயிர்கள்!


 
ஷீலா கோஷ்-
ஒரு 83 வயது பெண்.
இந்திய கிழக்குப் பகுதியில்
மேற்கு வங்காளம் மாநிலத்தில்
பாலி என்ற ஊரில் வசிக்கிறார்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு
அவரது ஒரே மகன்
இதய நோயால் காலமானார்.
இடிந்து போகவில்லை அவர்.

உழைத்து வாழும்
உன்னத எண்ணத்தில்
ஒவ்வொரு நாளும்
அந்தப் பெண்மணி
பாலியிலிருந்து
கொல்கத்தாவுக்கு வந்து
தின்பண்டங்கள் விற்று
கிடைக்கும் வருமானத்தில்
தன்மானத்தோடு வாழ்கிறார்

சூழ்நிலைகள் எளிதாக தள்ளியது
அந்தப் பெண்மணியைத்
பிச்சையெடுக்கும் நிலைக்கு.

அவரது கண்ணியம் மரியாதை
வாழ்வின் இறுதிவரை
உழைத்து வாழ செய்கிறது

தொண்டு நிறுவனங்கள்
அவரது துயர் தீர்க்க வந்த போதும்
அவரோ தன் சொந்த வாழ்க்கையை
தன் சொந்த கால்களிலேயே வாழ்கிறார்

உதவ நினைக்கும் மக்கள்
உதவுகிறார்கள் அவருக்கு
அவரிடம் பண்டங்களை வாங்கி

இன்று வரை இது நடக்கிறது
இப்படியும் இருக்கிறார்கள்
உழைத்து வாழும் உயிர்கள்!

(Thanks.Written by Stephen on October 9th, 2012
Story courtesy of Sufia Khatoon,A college student in Kolkata 
in academictips)   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1