google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இது பகுத்தறிவு எழுச்சியா....?

Saturday, November 24, 2012

இது பகுத்தறிவு எழுச்சியா....?




இன்று நாட்டில்
நிறைய பகுத்தறிவாளர்கள்...

பதுங்கிக் கொண்டிருந்தவர்கள்
எழுச்சிக் கொண்டார்களா.....?
தூங்கிக் கொண்டிருந்தவர்கள்
விழித்துக் கொண்டார்களா...?

பகுத்தறிவுத் தடாகத்தில் 
பூக்கின்றன நிறைய
வலைபூக்கள்! 

பகுத்தறிவு வானத்தில்
கீச்சுகின்றன  நிறைய
ட்வீட் குருவிகள்!

முகநூல்களின் முகங்களில்      
முகமூடியைக்கிழிக்கும்
பகுத்தறிவுப் புன்னகை!

அறியாமை
அகராதியிலிருந்து
அகற்றப்பட்டது...

மூடநம்பிக்கை
முக்காடு போட்டு
சுடுகாடு போனது...
இன்னும் வரும் எழுச்சி!
இளைய தலைமுறை புரட்சி!
இந்த மாற்றத்துக்கு
காணாமல் போன
கயமைத்தனம் கொண்ட
கடவுள் பிரதிநிதிகளே சாட்சி!

இந்த மாற்றத்துக்கு
அவர்களுக்கு துணையாக
அடக்குமுறையை ஆளும்  
ஆனவக்காரர்களே சாட்சி!

இன்னும் காலம் வரும் 
மணலை  கயிராகத் திரிக்கும் 
மந்திரவாதிகள் மறைந்துபோவார்...

************************************************************
                  Thanks-YouTube-Uploaded by karadi2000

 *************************************************************


இக்பால் செல்வன் 
இன்றைய இளையதலைமுறை 
பகுத்தறிவாளர்.......

பேய்கள், பூதங்கள் இல்லை எனத் தெரிந்தாலும்,கதைகளில் அவை சுவாரசியம் தருபவையாகவே உள்ளன, கடவுளும் கூட

இக்பால் செல்வன்@iqbalselvan_
கடவுள் தேவைப்படுகின்றார் பலவீனமான மனமுடையவருக்கும், தன்னம்பிக்கை குறைந்தவருக்கும், குற்ற உணர்ச்சி மிகுந்தவருக்கும்.


தமிழ் பகுத்தறிவாளர்கள் 

கோடங்கிKodangi 



******************************************************************

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1