எல்லோரும் நிர்வாணமாக
ஆடை எதுவுமின்றி...
எல்லோரும் நிர்வாணமாக...
கோவணமாவது கட்டுங்கள்
என்று சொன்னவரும்
நின்று கொண்டிருந்தார்
நிர்வாணமாக...
அவர் ஆடையையும்
அவிழ்த்து விட்டார்கள்...
இந்த நிலைமைதான்
இன்று நாட்டில்...
மதம்-சாதி-அரசியல்
அதில் உள்ள அவலங்களை
எழுதினாலும் பேசினாலும்...
எஞ்சி நிற்பது
அவமானம் ஒன்றே!
அதனால்தான்
அந்தக் காலப் புலவர்களும்
இந்தக் காலக் கவிஞர்களும்
அரசர்களுக்கும்
அரசுக்கும் துதிபாடியே...
*****************************************
********************************************
நிலாசூரியன்
Link-http://www.nilasuriyan.blogspot.in
மண்ணை முத்தமிடும் மழைத்துளிகள்...
நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!!
......நன்றி..நிலாசூரியன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |