ஏண்டா... அறிவுச்செல்வா...
என்னடா நம்ம வீட்டு வாசல்
கூட்டம் கூட்டமா பொம்பளைங்க
மகளிர் அணித் தொண்டர்களாடா...?
நேற்றுதானடா ட்வீட்டர்ல சேர்ந்தோம்
ஒரே கீச்சுல இப்படிப் பிரபலமாயிட்டமாடா...?
(அண்ணேன்...
நாம மோசம் போயிட்டம்..ண்ணேன்.
பொம்பளைங்க கையில
வெளக்குமாரோடு வந்து நிற்குறாங்க
ஏதோ நீங்க ஆபாசமா கீச்சிட்டிங்களாம்..
காவேரியைப் பற்றி ட்வீட்டர்ல...
இவுங்க காவேரி சொந்தக்காரங்கள்ளாம்
அப்படி என்னத்த..ண்ணேன் கீச்சிங்க..)
“கர்நாடக அரசே! காவேரியைத் திறந்து விடு”
அப்படித்தாண்டா கீச்சேன்..
அதில்லென்ன..டா ஆ..பாசம்...?
(அண்ணேன்...அதுதான் ஆபாசம்..
நீங்க கிழிச்..கீச்சது தப்பு
காவேரி நதியைத் திறந்து விடு
இல்லனாக்காட்டி.
காவேரி தண்ணீரைத் திறந்து விடு
அப்படின்னு கீச்சிருக்கனும்..ண்ணேன்.)
அடே...அறிவுச் செல்வா....
முதல்லே சொல்லக் கூடாதடா
அந்த ட்வீட்டர்காரனுக்குப் போன் போட்டு
கீச்சுனதும் பீச்சுனதும் போதும்
உடனே நிறுத்த சொல்லடா...
(அண்ணேன்...
நாம மறுபடியும் மோசம்போயிட்டோம்
யாரோ கவேரின்னு பிரபலமாம்
சைபர் கிரைம்ல புகார் கொடுத்திருக்காம்
போலீஸ் வந்துக்கிட்டு இருக்காங்களாம்..
அண்ணேன்...
என் பொண்டாட்டியோட மாமியாருக்கு
உடம்பு சரியில்லையாம்
நாளைக்கு வந்து உங்கள
புழல்லப் பார்க்கிறேன்.....ண்ணேன்)
அது யாருடா...?
பொண்டாட்டியோட மாமியாரு..?
அடப்பாவி...அம்மாவத்தான்
அப்படிச் சொல்றானா..?
பயந்தாங்கொள்ளிப் பய..
இனி அழுனுமுனாலும்
அம்மி மம்மினுதான்
இங்கிலீஷ் விங்கிலீஷ்லத்தான்
அழுவனுமோ..?..யாரடா..அது
நமக்கு எதுக்கு வம்பு
அந்த ஒட்டு மீசையையும்
தாடியையும் எடுப்பா..
பின்வாசல்லோடு எகிறிக் குதிச்சு
நம்மளும் நம்ம பொண்டாட்டியோட
மாமியாரு கால்ல போய்
விழுந்திட வேண்டியதுத்தான்...
பெண் பாவம் பொல்லாதது.
************************************************************
இன்றைய பீரங்கி தாக்குதல்....
thanks-shaanthi surendiran
காலைலே இருந்து ட்விட்டர் பக்கம் வரலை .எல்லாரும் பத்திரமா உள்ளே போக ட்ரை பண்ணாம இருக்கீங்களா ?:)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |