பேராசை-
பட்டத்துக்குப் போட்டி போட்டு
வாரிசு யுத்தம் நடக்கையில்
படுக்கையில் கிடந்த மன்னரோ
பல நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு
பலான லேகியம் விழுங்கியபடி....
***************************************
சாதி-
படித்து வாங்கிய பட்டத்தை
மறைத்து விட்டு
பல்யிளித்துக் கொண்டு
பிறந்து வாங்கியப் பட்டம்
பெயருக்குப் பின்னால்...
படித்திருக்கவே வேண்டாமே...?
*********************************************
மதுவும் மாதும்-
மாது தரும் போதையை விட
மது தரும் போதை மலிவானது
நீண்ட நேரம் நீடிக்கக் கூடியது.
இரண்டுக்கும் பின் விளைவுகள்
இருக்கிறது நிறைய....
இரண்டும் புடுங்கும்....பணம்.
*********************************************
படையல்-
பூஜை முடிந்து
பிரசாதம் வரும் என்று
ஆவலுடன் காத்திருந்தால்
கைவிரல்களைச் சூப்பிக்கொண்டு
ஏப்பம் விட்டார் சாமி...
அடமழையில் அவருக்கே
ஏழு நாட்கள் பூஜை இல்லையாம்.
***********************************************
அடகு-
வாங்கும் போது
எட்டு கிராம் இருந்த
தங்கம் மோதிரம்...
எட்டு தடவை போனது
அடகுகடைக்கு...
தேய்த்து...தேய்ந்து
இப்போது
இல்லாமல்லே போனது...
***********************************************
கடி-
படம் பார்க்கப் போனேன்
படத்திலும் கடி!
நிஜத்திலும் கடி!
அரங்கு நிறைய
அமர்ந்திருந்தன
மூட்டைப்பூச்சிகள்.....
"இந்தப் படத்துக்கு
ஏண்டா வந்த ..சோமாறி?"
*****************************************************
இன்றைய பதிவர் நண்பர் பக்கம் ....
நன்றி-
மலையருவி கவிதைகள் (நா.இளங்கோ)
சாக்கடையோர நாயாய் என் கவலைகள்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |