நம் காதலின்
சம்மதத்தை
என் இதழ்களைக் கவ்வி
மௌனத்தால் சொல்...
அது
தருமே
ஆயிரம் குடுவை
கள்ளுண்ட போதை!
உன் “ம்..” என்ற
ஒற்றைச் சொல்..
என்றும்
என் காதில்
ரீங்காரமிடும்
மந்திரச்சொல்...
அன்பே!..
உனக்காக
என் இதயத்தையே
தாஜ்மகாலாக...
ஆனாலும்
உன் அழகுக்குள்
மறைந்திருக்கு
ஆணவப் பேய்!
அதுவே
நம் காதலுக்கு
ஆபத்து...
அன்று வள்ளுவருக்கு
மதிமுகமாய் தெரிந்த
உன் முகம்......
‘‘மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்’’ (குறள், 116)
காதலியே!...
இன்று எனக்கு
இப்படித் தெரிவது ஏன்.....?
*********************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |