google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 'ம்' - காதல் மந்திரச் சொல்!

Monday, December 03, 2012

'ம்' - காதல் மந்திரச் சொல்!



 








நம் காதலின்
சம்மதத்தை
என் இதழ்களைக் கவ்வி
மௌனத்தால் சொல்... 

அது
தருமே
ஆயிரம் குடுவை
கள்ளுண்ட போதை!

 
உன் “ம்..என்ற
ஒற்றைச் சொல்..
என்றும்
என் காதில்
ரீங்காரமிடும்
மந்திரச்சொல்...

அன்பே!..
உனக்காக
என் இதயத்தையே
தாஜ்மகாலாக...

  ஆனாலும்



உன் அழகுக்குள்
மறைந்திருக்கு
ஆணவப் பேய்!
அதுவே
நம் காதலுக்கு
ஆபத்து...

அன்று வள்ளுவருக்கு 
மதிமுகமாய் தெரிந்த 
உன் முகம்......

‘‘மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்’’ (குறள், 116)

காதலியே!...
இன்று  எனக்கு 
இப்படித் தெரிவது ஏன்.....?

*********************************************

                   Thanks-YouTube-Published on Aug 13, 2012 by goldtreat


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1