google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உன் காலடி மண்ணை....

Wednesday, December 19, 2012

உன் காலடி மண்ணை....


              


மண் கவ்வ வைத்தாயே!
என்  மனம் கவர்ந்தப் பெண்ணே!
மண் கவ்வ வைத்தாயே!
உன் காலடி மண்ணை....
மண் கவ்வ வைத்தாயே!

கையிலிருந்த காசுக்கு
உன் அங்கங்கள் தழுவும்
தங்க நகைகள் தந்தேனே!

காசில்லாத போதும்
கடன் அட்டைகள் தேய்த்து
நீ ஆசைப்பட்டவைகளை
ஆசையோடு தந்தேனே!

உன் நிழல் தொட்டவரை
விரட்டி விரட்டி அடித்தேனே!
பெற்றோரையும் உற்றாரையும்
உன்னால் பகைத்தேனே!

எல்லாம் உன்னாலே
உன் முகத்தைப் பார்த்ததாலே....

என்  மனம் கவர்ந்தப் பெண்ணே!
மண் கவ்வ வைத்தாயே!
உன் காலடி மண்ணை....
மண் கவ்வ வைத்தாயே!




thanks-img from static.desktopnexus

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1