இந்த
நீர்ப்பறவை.....
முதலில்
கள்ளச்சாராயத்தில்
கலகலப்பாக
நீந்திக்கொண்டிருந்தது
கடைசியில்
கண்ணீரில் நீந்தி...
கண்ணீர்ப் பறவையானது.
சாதாரன திரைப்படமாக இருந்தது
அவார்டுகளை அள்ளிச்செல்லும்
அசாதாரன திரைப்படமாக....
அருள்சாமிகள்
நிறைந்துள்ள
இவ்வுலகில்
எஸ்தர்கள் போன்ற
வரம்தரும் தேவதைகள்...
நிறைய திருப்பங்கள்
கதையின் கவித்துவம்
நெஞ்சை வருடும்
ஒளிப்பதிவு...
பாடல்களில் பரவசமூட்டும்
அர்த்தமுள்ள வார்த்தைகள்
நினைவில் நிற்கும்
உரையாடல்கள்...
"சுட்டது அவுக.கொன்னது நானு"
எஸ்தரின் வாக்குமூலம்..
யதார்த்தத்தின்
எழுச்சிமிகு வார்த்தைகள்.
இப்படியும் ஒரு சினிமாவா..?
சமுதாய அவலங்களை
சத்தமின்றி..
சந்திசிரிக்க வைக்கிறது
நீர்ப்பறவை.
ஒரு தேவாலயம்
ஒரு கடற்க்கரை
இதுவே
நீர்ப்பறவையின்
கதைக்களம்...
எல்லாவற்றிலும் எளிமை
கதையிலோ வலிமை
இது
நீர்ப்பறவை அல்ல
கண்ணீர்ப் பறவை
எல்லோரும்
வாசிக்கவேண்டிய
கவிதை....அருமை!
/div> *****************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |