மின்சார விளக்கை
எரியவைக்கும் இழை
எது என்பதை அறிய....
மின்சாரக் குமிழ் விளக்கை
கண்டறிந்த அறிஞர்
தாமஸ் ஆல்வா எடிசன்
இரண்டாயிரம் பொருட்களை
இரவு பகலாகப் பரிச்சித்து....
எல்லாம் தோல்வியாக...
அவரது உதவியாளர்
தோல்வியில் துவண்டு...
எடிசனிடம் புலம்பினார்...
“நம் பரிசோதனைகள்
வீணாகப் போனதே!
இதிலிருந்து நாம் எதுவும்
கற்றுக்கொள்ளவில்லை..”
அதற்கோ எடிசன்
அலட்டிக்கொள்ளாமல்
அவரிடம் சொன்னார்....
“இதிலிருந்து நாம் நிறைய
கற்றுக்கொண்டோம்...
ஒரு நல்ல விளக்கை
எரியச் செய்வதற்கு
இரண்டாயிரம் பொருட்கள்
போதாது என்று...”
இப்படித்தான் என் தோழா!
தோல்விகள் தரும்
நிறையப் பாடங்கள்.
வெற்றியின் அஸ்திவாரம்
புதைக்கப்பட்ட தோல்விகளே!
தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" (குறள். 619)
நன்றி-மு.வ உரை:
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.thanks-http://www.thirukkural.com
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |