google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அந்த எமனுக்கும் கால் ஒடிந்ததே!.

Tuesday, December 25, 2012

அந்த எமனுக்கும் கால் ஒடிந்ததே!.


அன்று எமனுக்கு வாகனம்
எருமை மாடு என்று
புராண கதைகளில் புருடா
இன்று எமனுக்கு வாகனம்
இரண்டு சக்கர மோட்டார்...?
எத்தனை உயிர்கள்
இல்லாமல் போனது?

சென்னை போன்று
பெருநகரங்களில்...
இந்த வாகனத்தில் போவது
இன்றைய காலகட்டத்தில்..
எமலோகம் போவது போன்றதுதான்..

எத்தனையோ என் நண்பர்கள்
இந்த வாகனத்தில் போனவர்கள்
இன்று இல்லாமல் போனார்கள்
இருக்கும் சில பேர்களும்
கை ஒடிந்து கால் ஒடிந்து
வாழ்ந்தும் வாழாதது போல்...

சிக்னல் நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்த
என் உறவினர் மகன்..
கம்பிகள் ஏற்றி வந்த
தள்ளு வண்டி இடித்ததில்
இதயத்தில் கம்பிகள் பாய்ந்து..
இல்லாமல் போனான்
இன்று அந்தக் குடும்பமே
இல்லாமல் போய்விட்டது

இன்று உலகம் வேகத்தில்
அத்தனை பேரும் அவசர கதியில்..
இருபது வருடங்களுக்கு மேல்
இரு சக்கர வாகனம் ஒட்டிய
என்னைப் போன்ற அனுபவசாலி....?

இந்த வருட ஆரம்ப மாதத்தில்
அத்துமீறிய ஆட்டோ வாகனம்
அடித்துத் தள்ளியதில்
கை ஒடிந்து போனது...

இந்த வருட இடைப்பட்ட காலத்தில்
சாலையில் கொட்டிய எண்ணையில்
சருக்கியதில் கால் ஒடிந்தது...

இதைவிடக் கேவலம்....?
இரண்டு நாட்களுக்கு முன்பு
சாலையின் ஓரத்தில்
சும்மா நிறுத்தியிருந்த போது
யாரோ இடித்துத் தள்ளியதில்..
என் இரண்டு சக்கர வாகனம்
முன்னும் பின்னும் நொறுங்கி...

ஹா..ஹா...
அந்த எமனுக்கும் கை ஒடிந்ததே!.
அந்த எமனுக்கும் கால் ஒடிந்ததே!.

                ...............................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1