முதல் கட்டமாக சென்னையில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 200 மலிவு விலை ஓட்டல்கள் திறக்க அதிரடி உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
ஏழை எளியவர்கள் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பிரமாச்சரி மேன்சன் நபர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்
அரசு டிபன் சென்டரில் அனைத்தும் விலைகுறைவு நிச்சயமாக ஆரோக்கியத்துக்கும் குறைவிருக்காது நம்புவோமாக!
இட்லி-1 ...................................... 1 ரூபாய்
தயிர் சாதம்.................................3 ரூபாய்
சாம்பார் சாதம் ..........................5 ரூபாய்
இத்திட்டம் சென்னையில் இன்னும் அதிகரிக்கப்படும் அதே நேரம் தமிழகம் முழுவது வந்தாலும் ஆச்சரியமில்லை இத்திட்டத்தை அம்மா அவர்கள் வெற்றிகரமாக நடத்த வேண்டும்
அதற்குப் பிறகு தமிழகத்தின் நிரந்திர முதல்வர் நாற்காலி என்றும் அம்மாவுக்கே! அம்மானா சும்மாவா...? அம்மா அம்மாதான்!.
இதே சமுதாயத்துக்கு நன்மைதரும் பார்வையை அம்மா எல்லா விசயங்களிலும் கொண்டுவரவேண்டும்.
எத்தனையோ முதலமைச்சர்கள் ஆண்ட இந்த தமிழகத்தில் அம்மா அவர்கள் ஏழைகளுக்கு செய்யும் இந்த நன்மை அவரை இங்குமட்டுமல்ல ...இந்தியா முழுவதும் பேசவைக்கும். உலகமே அம்மாவை உற்றுப்பாக்கும் என்பதில் ஆச்சரியமில்லை!
இது என்கதை.....
(அன்று (1983) நான் சென்னை வந்தபோது வேலையில்லாத் திண்டாட்டத்தில் வேதனையில் வாடி பொரிகடலை தின்று தண்ணீர் குடித்து விட்டு படுத்து தூங்கிய நாட்கள்
இந்த சென்னையில் எத்தனையோ...பசிக்கொடுமையும் படித்ததற்கு ஏற்ற வேலைகிடைக்காமல் வருமானமின்றி அலைந்த அந்த 3 ஆண்டுகள் என்வாழ்வில் ஒரு இருண்டகாலம் அந்த நிலை இந்த உலகில் என்றும் எவருக்கும் வரக்கூடாது என்பதே தினமும் இன்றும் நான் தூங்கும் முன் நினைப்பது )
................பரிதி.முத்துராசன்
******************************************************************************
கருத்துக்கணிப்பு-
அரசு டிபன்-சென்டர் பற்றிய உங்கள் கருத்து...?
***************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து..........?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |