இவர்கள் எதைப் புதைக்கின்றார்கள்...?
இது சாதாரணமானப் புகைப்படமல்ல
பேசும் புகைப்படம்!
சோகத்தைப் புதைக்கும் புகைப்படம்.
2012-ல் தென்சூடானில்
60,000 பேர் இடம்பெயர்ந்த
Yida அகதி முகாமில்
ஊட்டச் சத்து குறைபாடாலும்
நோய் தாக்குதல்களிலும்
தினமும் மூன்று முதல் அய்ந்து
குழந்தைகளும் பெரியவர்களும்
இறந்துகொண்டிருந்தார்கள்......
இது மலேரியாவால் இறந்த
தங்கள் அன்புக்குரியவரை
புதைத்துக்கொண்டிருக்கிறார்கள் ....
இவைகள்
அவர்களின் சோகக் கைகளே
.................thanks-photo by John Stanmeyerguardian.co.uk
அகதிகள் முகாம்
இங்குமட்டுமல்ல ...
உலகமெங்கும்
இப்படித்தானோ?
அய்யகோ...
வாழ்ந்து அழிந்தவர்களின்
வாழ்க்கையை நினைத்தாலே
நாம் வாழும் வாழ்க்கையும்
வேதனையே! கொடிய வேதனையே!
...................................பரிதி.முத்துராசன்
****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |