google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம்-வரும்...ஆனால் வராது...!...?

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம்-வரும்...ஆனால் வராது...!...?


தமிழகத்தில் விஸ்வரூபம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா....? என்ற எதிர்பார்ப்பு .... 
இன்று இரவு 8 மணியளவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு............. 

பிறகு 8.30 மணிக்கு தீ...ர்...ப்...பு....என்றார்கள்  

இப்போது 10.00 மணிக்கு என்கிறார்கள் ...தீ..ர்...ப்...பூ ...(காதில பூ)
அது சரி....தீர்ப்பு சொல்வதுக்கே இந்த இழு இழு இழுக்கிறார்களே 
தீர்ப்பு.... 

                      வரும் ஆனால் வராது...?  
என்ற காமெடி காட்சிபோல் ...

































விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் என்று கதைகளில் படித்த ஞாபகம் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று விஸ்வரூபம்-தமிழகத்தில் தடை விசயத்தில் அரசும் கமலஹாசன் தரப்பினரும் செய்த நீதிமன்ற விவாதங்களில் இருந்து தெரிந்துகொண்டோம் 
கிட்டத்தட்ட இந்த தடை விவகாரம் மற்றும் விவாதம் அந்த படத்தை காசு கொடுக்காமல் ஓசியில் பார்த்து விட்டதாகவே தோன்றுகிறது ..


இதற்க்கு முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல்....(விஸ்வரூபம்-சில கேள்விகள்...?)
திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும்போது "குடி குடியைக்கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்" என்றும்  புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது  "SMOKING IS INJURIOUS TO HEALTH" என்றும் எச்சரிக்கை வாசகங்கள் வருவது போல் மதச் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போதும் மற்றும் கற்பழிப்பு,கொலை,கொள்ளை காட்சிகள் வரும்போதும்  இ.பி.கோ.சட்டங்களையும் குற்றத்திற்கான தண்டனைகளையும் எச்சரிக்கை வாசகங்களாகத் திரையில் வெளியிடலாமா..? ...என்று நாம் கேள்வி எழுப்பியதுபோல்.....
 இத்திரைப்படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றும் இப்படத்தில் சித்திகரிக்கப்பட்டுள்ளது போல் அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல என்பதாகவும் எச்சரிக்கை வாசகத்துடன் கர்நாடகாவில் வெளியிடப்பட்டுவிட்டது கேரளாவிலும் பிரச்சனை இல்லை

இங்கே இப்போது உயர் நீதிமன்றம் ....தீர்ப்பு ...வரும்...ஆனால் வராது...!...?
அப்படியே வந்தாலும் படம் திரையரங்கங்களில் ...வரும் ஆனால் வராது...? 
செல்லுலாய்டு  படம் செல்லரித்துப் போன பின்புதான் தீர்ப்பு வருமோ...? 
எல்லோரும் பார்த்து முடித்தப்பின்புதான் அரங்கில் வந்து ஆடுமோ...?
என்ன உலகமடா....இது?

........................................................................................................................................................
நேற்று இரவு 9 மணிக்கு இப்பதிவு வெளிவந்தது காலையிலிருந்தே தீர்ப்புக்காக காத்திருந்து கடுப்பில் இப்பதிவை வெளியிட்டோம்   ...இரவு 10.30 மணிக்கு தீர்ப்பு வந்தது ..............கூடவே மேல் முறையீடு என்றும் சிக்கலும் சேர்ந்துகொண்டது ...இன்று  இதுவரை (காலை 10 மணிவரை வரும் ஆனால் வராது...? ..நிலை மட்டும் மாறவில்லை!

செய்தி...............
 இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியான பிறகு படத்தை வெளியிடலாம் என்று திரையரங்குகள் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி.
 வரும்...ஆனால் வராது - VADIVELU COMEDY.
                           thanks-YouTube-by -rajasankarprem
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1