அந்த
பேருந்து நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன்...
எந்தப் பேருந்திலும்
ஏறவில்லை....
வந்த பேருந்துகள்
அத்தனையும்
சொத்தைகள்....?
சில பேருந்துகள் வந்தன
மதம் பிடித்த யானைகளுடன்
மனிதாபிமானத்தை
நசுக்கியபடி...!
சில பேருந்துகள் வந்தன
நிஜ நிறத்தை மறைத்து
ஊழல் நிறத்தை
பூசிக்கொண்டு....!
இப்போது
இன்னும் சில பேருந்துகள்
சினிமாப் பதாகைகள்
கட்டிக்கொண்டு....
எந்தப் பேருந்து
எந்த ஊர் போகுமோ
என்னைக் கூட்டிக்கொண்டு...?
எந்தப் பேருந்திலும்
ஏறவில்லை....
என்ன செய்வது என்றும்
எனக்குத் தெரியவில்லை...!
இந்தப் பேருந்துகளில்
ஏறுவதைவிட....
காந்தி தாத்தா வழியில்
பாதையாத்திரையே...
உடலுக்கும் நல்லது
உள்ளத்துக்கும் நல்லது
உலகத்தில் உள்ள
மனிதர்களுக்கெல்லாம் நல்லது.
..................பரிதி.முத்துராசன்
******************************************************************************
சிந்திக்க சில கீச்சுக்கள்!
இரத்தத்தில் இரும்பு உள்ளது. ஆனாலும் காந்தம் ஏன் உடலோடு ஒட்டமாட்டேங்குது! #help #டவுட்டு
மரித்துப் போன மரங்களில் எழுதப்படுகிறது வாழ்வது எப்படி என#புத்தகம்
நக சுத்தி பற்றி நெட்டில தேடினா தீராத வியாதின்னு சொல்லுது! இப்ப எலுமிச்சை பழத்தை விரலுக்கு மாட்டிறதா? இல்ல தலைக்கு தேய்க்கிறதா?
துயில் கொள்ளும் குழந்தை கனவில் எதைக் கண்டு சிரித்ததோ. எதுவாக இருந்தாலும் அதற்கு என் நன்றி.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |