பகுத்தறிவு-
பிள்ளையாருக்கு எறிந்த சிதர்தேங்காய்
அருகிலிருந்த பெரியார் சிலை காலடியில்....
அதை எடுத்து மண்ணைத் துடைத்து....
அந்த ஆத்திகரிடமே கொடுத்தார் அவரும்.
*****************************************************
கடல்-
இரண்டுமணிநேரமாய் சாத்தானின் கூக்குரல்
மரணக்கடலின் கொடூர அலைகள்
அத்தனையும் முடிந்தது
கடல் வற்றிப்போனதோ?....திரையரங்கில்..
***************************************************
விஸ்வரூபம்-
சும்மா கிடந்த சங்கை
ஊதி கெடுத்தான் ஆண்டி...!
அப்படியினா....?
அமைதியை அமளியாக்குவதா...?
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
***************************************************
என் வலைப்பதிவு-
அவ்வப்போது....புயலின் வருகை
சிலநேரங்களில் வாசிப்போருக்கு சேதாரம்
சிலநேரங்களில் நேசிப்போருக்கு சேதாரம்
எல்லா நேரங்களிலும்
எழுதும் எனக்கு சேதாரம்
******************************************************
அம்மா-
கால்தடுக்கி கீழே விழும்போதும்
அந்த கட்சிப்பிரமுகர்..........
அ..ம்..மா என்றுதான் அலறினார்
அம்மாடா....
பிழைத்துக்கொண்டது அவர் பதவி!
*************************************************
ஹைடெக் கவிதை-
ஹைக்கூ கவிதை தெரியும்
இஃது என்ன புதுசா
ஹைடெக் கவிதை...?
காகிதத்தில் எழுதினால் ஹைக்கூ
கணனியில் எழுதியதால் ஹைடெக்!
.........................பரிதி.முத்துராசன்
*****************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |