இந்திய திரையுலகில் கோலிவுட் மட்டுமே அதிக திரைப்படங்களைக்(எது மாதிரி?) குட்டி போடுகிறது.
இங்கே அம்மா உணவகம் 1 ரூ. இட்லி போன்று கோடம்பாக்கம் கோலிவுட் பவனில் மிகக் குறைந்த முதலீட்டில் (2 கோடியிலிருந்து 4 கோடிக்குள்) சினிமாக்கள் அவிக்கப்படுகின்றன..
நிறைய சினிமாக்கள் வந்தாலும் அவைகள் பல வகைகளில் நல்ல வசூல் செய்கின்றன குறைந்த செலவு அதிக அறுவடை.
காரணம் உலகிலேயே தமிழர்கள் போன்று சினிமா மோகம் கொண்டவர்கள் எந்த நாட்டிலும் இல்லை...அப்படியொரு சினிமா சுகவாசிகள் தமிழர்கள்(ஏமாளிகள், பைத்தியங்கள்...?)
இங்கேதான் சினிமா நடிகர்கள் கடவுளை விட அதிகம் போற்றப்படுகிறார்கள் அரசியல்கூட அவர்களின் ஆதிக்கம்தான் நடிகர்களின் பதாகைகள் கூட ரத்தம் குடிக்கும் நடிகர்களின் சுவரொட்டிகள் பாலபிஷேகத்தில் நனையும்(அது வெளிநாடாக இருந்தாலும் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள்)
கடந்த ஆண்டு 200-க்கு மேல் தமிழ் திரைப்படங்கள் வெளிவந்தன இந்த ஆண்டு 300-க்கு மேல் வெளிவரலாம்..தமிழ்நாட்டில் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையே திரையரங்குகள் தட்டுப்பாடு...பஞ்சம்
இப்போது வெளி வரும் படங்களும் டாஸ்மாக்கிலிருந்து வெளிவரும் மாவீரர்கள் போன்று தள்ளாடிக்கொண்டு அலைகின்றன அதனால் அவைகள் வந்த வேகத்தில் காணாமல் போகின்றன
ஆனால் ரஜினிகாந்த்,கமலஹாசன்,விஜய்,அஜித்,சூர்யா போன்றவர்களின் திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்கப்படுகின்றன..அவைகள் அதிக பொருட்செலவிலும் அதீத நிதானத்திலும் நம்பிக்கையிலும் சிங்க குட்டிகள் போன்று கம்பீரமாக வருகின்றன (அவைகளிலும் சில கலப்படம் போல் மாறிப் பிறந்துவிடுவதுண்டு )
இவர்களின் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கும் படங்கள்...
1-ரஜினிகாந்த்-கோச்சடையான்
நடிகர்கள்- ரஜினிகாந்த் ,தீபிகா படுகோன், சரத்குமார்,ஷாக்கி ஷெராப், நாசர் இசை -A.R.ரகுமான்
திரைப்படவியல்-ராஜீவ் மேனன்
எழுத்து-K.S.ரவிகுமார்
இயக்கம்-சௌந்தர்யா ஆர் அஸ்வின்
2-கமலஹாசன்-விஸ்வரூபம் 2
மிகுந்த சிரமங்களுக்கிடையில் வெளிவந்த விஸ்வரூபம் படம் முடிவில் பார்ட்-2 விரைவில் வரும் என்று சொன்னது...அதுவும் பிரச்சனைகளைச் சந்திக்குமா..? அல்லது எப்படி வரும் என்ற பெரிய எதிர்பார்ப்பு...
எழுத்து-நடிப்பு-இயக்கம் எல்லாம் அவரே என்பது தெரிந்ததே
3-விஜய்-தலைவா
நடிகர்கள்-விஜய்,சத்யராஜ்,அமலா பால்,சுரேஷ்,சந்தானம்,ராகினி நந்த்வாணி,
இசை-G.V.பிரகாஷ் குமார்
இயக்கம்-A.L.விஜய்.
4-அஜித்-வலை
நடிகர்கள்-அஜித் குமார்,ஆர்யா,கிஷோர்,நயன்தாரா,டாப்சி,
இசை-யுவன் சங்கர் ராஜா
இயக்கம்-விஷ்ணுவர்தன்
5-சூர்யா-சிங்கம் 2
நடிகர்கள்-சூர்யா,அனுஷ்கா,ஹன்ஷிகா,விவேக்,சந்தானம்
இசை-தேவி ஸ்ரீ பிரசாத்,
இயக்கம்-ஹரி
இவைகளில் உங்களுக்கு அதிக ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டும் திரைப்படம் எது...? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வாக்களித்துத் தேர்வு செய்யுங்கள்.....
நீங்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் எது?
வாக்களித்த அனைவருக்கும் நன்றி.....
***************************************************************
எப்படி இருக்குங்க நாடு...நம்ம நாடு?
*******************************************
இலங்கை அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
இலங்கையில் தீவிரவாத வன்முறையை இந்தியா தூண்டிவிடுகிறது என்று கோத்தபய ராஜபட்ச கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்
உலகில் எந்த நாட்டிலாவது தீவிரவாதம் தலைதூக்கினால் அதை கண்டிக்கும் முதல் நாடு இந்தியாதான். இலங்கையில் தீவிரவாதம், வன்முறையும் பெருகியதற்கு அந்த நாட்டு அரசுதான் காரணம்..... என்றார் நாராயணசாமி...நன்றி தினமணி
(அண்ணேன்...எப்ப பார்த்தாலும் இப்படியே வன்மையாகக் கண்டிப்பதாக படம் காட்டிக்கிட்டு இருக்கிறீங்களே...இதுவும் நல்ல ஆக்சன் த்திரிலர் படமாக இருக்கே...இந்தப் படம் எப்ப ரிலீஸ் ஆகும்...?)
எப்படி இருக்குங்க நாடு...நம்ம நாடு?
*******************************************
இலங்கை அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
இலங்கையில் தீவிரவாத வன்முறையை இந்தியா தூண்டிவிடுகிறது என்று கோத்தபய ராஜபட்ச கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்
உலகில் எந்த நாட்டிலாவது தீவிரவாதம் தலைதூக்கினால் அதை கண்டிக்கும் முதல் நாடு இந்தியாதான். இலங்கையில் தீவிரவாதம், வன்முறையும் பெருகியதற்கு அந்த நாட்டு அரசுதான் காரணம்..... என்றார் நாராயணசாமி...நன்றி தினமணி
(அண்ணேன்...எப்ப பார்த்தாலும் இப்படியே வன்மையாகக் கண்டிப்பதாக படம் காட்டிக்கிட்டு இருக்கிறீங்களே...இதுவும் நல்ல ஆக்சன் த்திரிலர் படமாக இருக்கே...இந்தப் படம் எப்ப ரிலீஸ் ஆகும்...?)
********************************************************
சொன்னதும் சொல்லாததும்....
***********************************************************************
தூக்குத் தண்டனையை மாற்ற அமைச்சரவை தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்
(சொன்னது) தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்....நன்றி தினமணி
(சொல்லாதது) என் உயிரிலும் மேலான உடன்பிறப்புகளே! கல்தோன்றி மண்தோன்றா காலத்திருக்கும் முற்பட்ட மூத்த (டாஸ்மாக் குடிமக்களும்தான்) குடிமக்கள் நீங்கள் என்பது உண்மையானால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை தி.மு.க.வுக்கு அளித்து 40 இடங்களும் எங்களுக்கே கிடைக்கும் என்றால் எனது பரம்பரையில் உள்ள கடைசி கொள்ளுப் பேரன்கள் வரை அனைவரையும் டில்லிக்கு அனுப்பி பாராளுமன்றத்தில் நிச்சயம் தூக்குத் தண்டனைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவேன்...தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன்....(யோவ்....எங்கேய்யா..நம்ம தலீவர..தூக்கிட்டு போறீங்க...? அட..கீழ விடுங்கப்பா அவரு சும்மாகாட்டியும் சொன்னாரு அதுக்குள்ள..)
***********************************************************************
தூக்குத் தண்டனையை மாற்ற அமைச்சரவை தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்
(சொன்னது) தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்....நன்றி தினமணி
(சொல்லாதது) என் உயிரிலும் மேலான உடன்பிறப்புகளே! கல்தோன்றி மண்தோன்றா காலத்திருக்கும் முற்பட்ட மூத்த (டாஸ்மாக் குடிமக்களும்தான்) குடிமக்கள் நீங்கள் என்பது உண்மையானால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை தி.மு.க.வுக்கு அளித்து 40 இடங்களும் எங்களுக்கே கிடைக்கும் என்றால் எனது பரம்பரையில் உள்ள கடைசி கொள்ளுப் பேரன்கள் வரை அனைவரையும் டில்லிக்கு அனுப்பி பாராளுமன்றத்தில் நிச்சயம் தூக்குத் தண்டனைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவேன்...தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன்....(யோவ்....எங்கேய்யா..நம்ம தலீவர..தூக்கிட்டு போறீங்க...? அட..கீழ விடுங்கப்பா அவரு சும்மாகாட்டியும் சொன்னாரு அதுக்குள்ள..)
***********************************************************
கோலிவுட் சினி பப்ஸ்...........
அட..நம்ம தமிழ் ரசிகர்கள்தான் இப்படி என்றால் கேரளாவிலும் கொடிகட்டிப் பறக்கிறது சினிமா மோகம்....
என்று தணியும் இந்த சினிமா மோகம்?
என்று தணியும் இந்த சினிமா தாகம்?
(பாரதி மன்னிக்கவேண்டும் )
கோலிவுட் சினி பப்ஸ்...........
நடிகை நிகிஷா பட்டேல் டிரைவரை தாக்கிய ரசிகர்கள்... தலைவன் படப்பிடிப்பு ரத்து
ஆட்டோகிராப் கேட்டதற்கு பிடித்து தள்ளியதால், நடிகை நிகிஷா பட்டேலின்
டிரைவரை ரசிகர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்
தலைவன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அட..நம்ம தமிழ் ரசிகர்கள்தான் இப்படி என்றால் கேரளாவிலும் கொடிகட்டிப் பறக்கிறது சினிமா மோகம்....
என்று தணியும் இந்த சினிமா மோகம்?
என்று தணியும் இந்த சினிமா தாகம்?
(பாரதி மன்னிக்கவேண்டும் )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |