google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அய்யோ அஞ்சலி..சீக்கிரம் வா அஞ்சலி

Friday, April 12, 2013

அய்யோ அஞ்சலி..சீக்கிரம் வா அஞ்சலி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkXtN7GBT0Qc03yF8ybauEBIIZsrJFPfFZzNgvXo2MalwmeiIlGu5ooMXz0ZdpxJec-fpoVPetY97t9_zVDVyg7V7nGkGaomlrocXjvAq3mF1EKw1v6lkjnos0rX8nkCt0AaQbQOilRwsP/s1600/05.jpg
 அடே..அறிவுச்செல்வா! என்னடா நடக்குது நாட்டில்?  அஞ்சலியை காணவில்லை இதுதான் இன்று தமிழ் நாட்டில்  தலையாயப் பிரச்சனையா?அஞ்சலி இல்லாமல் ரயில் கூடத் தடம் புரளாமல் ஓடமாட்டேங்குது

நாளிதழ்கள் தாங்கள் அவதரித்ததே அஞ்சலிக்காகத்தான் என்று முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை கதையாகச்  சொல்கின்றன 
தொலைக்காட்சிகள் காணவில்லையே அஞ்சலியை என்று கவலையில் அழுது புலம்புகின்றன

காலியாகக் கிடந்த சேட்டை  திரையரங்கம்கள் அரங்கம் நிறைந்து நல்ல வசூல் வேட்டை செய்கின்றன அஞ்சலியை அங்கே பார்க்கலாம் என்பதாலா? இவர்கள் கவலை உண்மையானதா...? இல்லை இவர்கள் வாய்க்கு கிடைத்த அவலா...அவள்?

காவலர்கள் கால் வலிக்கத் தேடியும் கிடைக்காத அஞ்சலி அவ்வப்போது தொலை பேசியில் யாருடனாவது பேசி அவர்களைக் கடுப்பு ஏற்றுவதாகப் புலம்புகிறார்கள்..வீரப்பன் ரேஞ்சுக்கு வீடியோ எல்லாம் வருமோ என்று எதிர்பார்க்கிறார்கள்...? 

இவையெல்லாம் விடக் கொடுமை...பணம் கொடுத்து  படத்துக்குப் புக் செய்த  தயாரிப்பாளர்கள் வயிற்றில் புலி சிங்கம் கரடி எல்லாம் படை திரண்டு ஓடுகிறது இன்னும் கொஞ்சநாளில் ஜனாதிபதிக்கு மனு போட்டு ராணுவ உதவியை கேட்பார்களோ...?

http://movies.infoonlinepages.com/gallery/var/albums/Actress/A/Anjali/Stills-9/Anjali-At-Setta-Press-Meet-Photos-11.jpg?m=1364551589  

அஞ்சலியை காணாததற்கு இன்னும் ஒன்றுதான் நாட்டில் பாக்கி கட்சி தலைவர்கள்  போராட்டம் அறிவிக்கவில்லை...கருப்பு கொடி காட்டவில்லை..கடிதம் எழுதவில்லை ..நிதி ஒதிக்கீடு செய்யவில்லை 
இன்னும் வாலிப வயோதிக அன்பர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை 

அன்று மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது எங்கேடா போனார்கள் இந்த நாளிதழ்கள்...? ஒவ்வொரு செய்தியையும் பூதக்கண்ணாடி வைத்துத்தாண்ட பார்க்க வேண்டிய நிலை..தொலைக்காட்சிகள் வீண் விவாதம் செய்தே போராட்டத்தை மூடி மறைத்தார்கள்..

(அண்ணேன்..அவிங்க கிடக்கிறாங்க...பூனைப்படையை அனுப்பினா அஞ்சலியை அப்படியே அமுக்கிட்டு வந்துடுவாய்ங்க..பூனைக்குதான் எலி எங்க இருக்குனு தெரியும்...அய்..எப்படி நம்ம  அய்டியா...?)     



அய்யோ அஞ்சலி....சீக்கிரம் வா அஞ்சலி...(அடேய்..புண்ணாக்கு தலையா உன்னையும் சேர்த்துத்தான்டா) இவிங்க தொல்ல தாங்க முடியல..இப்படித்தான் எங்க பக்கத்து வீட்டு பங்கஜத்த காணவில்லை என்று தேடினோம்  மூணு நாள் கழித்து  கழுத்தில் தாலி கட்டிக்கொண்டு முச்சந்தி மூக்காண்டியுடன்...அப்புறம் அவளே வந்தாள்
எது எப்படியோ அந்தச் சேட்டை படத்தைவிட இந்த (நாட்டுக்) கட்டை படம் நல்லாத்தான் இருக்கு.....   

***************************************************************************

இது சும்மா சிரிக்க...........

கிருஷ்ணகிரியில் கைதான போலி பெண் எஸ்.ஐ-

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/d21dd00b-f4d2-4f41-83c7-32ea1e2a1540_S_secvpf.gif
கிருஷ்ணகிரியில் 10-ம் வகுப்பு வரையே படித்துள்ள கவிதா என்கிற மஞ்சுளா (25) தனது உடல் தோரணையை வைத்து எஸ்.ஐ. என்று பொய் சொல்லி இரவு 9 மணிக்கு மேல் குறிப்பாக குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களை குறி வைத்து பணத்தை பறித்துள்ளார்....நன்றி மாலைமலர் 
 
அம்மணி நீ நல்லாவே நடிக்கிற...நீ  சினிமாவுக்கு வரலாம்....உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இருக்கு....இப்பலாம் படத்தில சொர்ணக்காவ  காணல...


****************************************************************************
எப்படித்தான் இருக்குங்க  நாடு....?

சட்டசபை கூட்டம்: தி.மு.க. - தே.மு.தி.க. புறக்கணிப்பு 




2 நாள் நீக்கம் முடிந்த பின்பும் தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று சபைக்கு வராமல் புறக்கணித்தனர். இதே போல் நேற்று முன்தினம் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க. உறுப்பினர்களும் நேற்று சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர்..............நன்றி தினபூமி 
 
நாங்க உள்ளே வந்தா நீங்க வெளியே தூக்கிப் போடுறீங்க...அப்படியே உள்ளே இருந்தாலும் உங்க ஆளுக மேசையை தட்டுற தட்டுல காது சவ்வு கிழிஞ்சி போகுது....அப்புறம் லண்டனுக்குப் போயித்தான் சரிபண்ண வேண்டியிருக்கு ...அதுக்கு இப்படி வெளியேவே இருந்திட்டு போகலாம்..


ஏய்..நான் யாரு தெரியுமா? எங்க அப்பா யாரு தெரியுமா?எங்க தாத்தா யாரு தெரியுமா? எவ்வளவு கஷ்டப்பட்டு ...எத்தனை பேரை அடிச்சி புடிச்சி...பச்ச தண்ணிகூட குடிக்காம  கோட்டைக்கு உள்ளே வந்தா...இப்படி பண்ணுகிறீர்களே.....நான் நினைச்சா நாளைக்கே செங்கோட்டைக்கு போகமுடியும்..ஆங்..... 
 **************************************************************************
இது மலையாள திரையுலக புகைச்சல்..... 
 
 பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் ரகசிய திருமணமா?


























யுவன் யுவதி' திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்த ரீமா கல்லிங்கல்லுக்கும்  மலையாள பட இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் எர்ணாகுளத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மலையாள பட உலகில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன...நன்றி-தினமணி 

ஏம்பா...சேட்டன் தும்பிகளா அங்கேயும் ஆரம்பிச்சிட்டியிங்களா....? அந்தப் பொண்ண ரகசியமாய் கையப் புடிச்சி இழுத்தியா...?
(அய்ய...எண்ட குருவாயூரப்பா... அ...ஆளு...என்ன பறையுது......?) 
அட......ஏம்பா...இந்தமாதிரி பஞ்சாயத்தலாம் கூட்டுறீங்க...?  
 
திரையுலகில் ஒரு மாமனிதர்............



பூரண மதுவிலக்கை வேண்டி 34 நாட்கள்  உண்ணாவிரதம்  இருந்த காந்தியவாதி சசி பெருமாளை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வேண்டிய சினிமா உலகில் ஒரு நல்ல இதயம் நடிகர் சிவகுமார் அவர்களை வாழ்த்துவோம்  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1