google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கனவில் கடவுள் மட்டுமா வருவார்..

Sunday, April 21, 2013

கனவில் கடவுள் மட்டுமா வருவார்..

http://wfiles.brothersoft.com/v/v_s/vidya_balan_46393-480x360.jpg
குறள் தந்த கவிதை-9

கனவில் வந்தார் 
கடவுள் என்பார்...
கடவுள் மட்டுமா வருவார்
நள்ளிரவில் 
டர்ட்டி பிச்சர் படம் பார்த்தால்
வித்யா பாலன் கூட  
விடியவிடிய வருவார்..
விசா இல்லாமல் வருவது 
கனவு மட்டுமே!

இதோ அழைக்கிறார் என்று
கைகளை விரிக்கின்றீர்களே
உங்கள் கண்களுக்குத் தெரிபவர்
எங்கள் கண்களுக்கு 
ஏன் தெரிவதில்லை?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjheWI6SQNr7L2Ha8sW4BwiN0tEeSFECdzd3znkuIZsO1ykfseDAxrbdHSs6RLYdcu_-wur0hc8HYeY_MAEWrlliAEB0MPTvMlUQZE6uOdVFavou1XBTi4Rk7WcfOEUoPBTZ-q-NiAazAe/s1600/2013_2image_19_33_443421924Hyderabadbombblast-ll.jpg

உயிர்களைக் கொல்வது பாவம்
என்று சொன்ன கடவுள்
மனித உயிர்களுக்கு மட்டும்
விதிவிலக்கு சொன்னாரா...?
வீதிக்கு வீதி வெடிக்கும் குண்டுகள்
மதவெறி கொண்ட 
மனிதர்கள் போடும் சண்டைகள் 
அப்பாவி மனிதர்களை 
அழித்து மகிழும் பாவிகள்

பசித்த வயிற்றுக்கு 
உணவிடுவாரே கடவுள்  
உண்டவருக்கு ரெண்டகம் செய்பவன்
உயிரோடு இருப்பதும் கோமா நிலையே
 

உடல் தள்ளாடும் எழுந்து நிற்காது
கண் திறந்திருக்கும் பார்வை தெரியாது
காது கேட்கும் எதுவும் புரியாது
கெட்ட நாற்றம் மட்டுமே மூக்கு நுகரும்
வாய் பேசும் வார்த்தைகள் வராது
 

மதுப் போதையும் மதப் போதையும் ஒன்றே
அதை அறிந்தால் போகும் பாதையும் நன்றே 

 

http://i.ytimg.com/vi/b3R0_fjC9Ik/0.jpg  

கவிதை தந்த குறள்-9 
 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1