மாமன்னரின்
அந்தப்புரமும்
நொந்தப்புரமாகிவிடும்
மாதம் மும்மாரி
மழை பெய்யவில்லை எனில்....
அம்மா! தாயே! என்று
வாழ்த்திப்பாடும் வாயும்
சும்மா சொன்னதாக
தூற்றிப் பாட துணியும்..
அதனால்தான்
இங்கே
மழையில்லா காலத்தில்
அடைத்து வைத்த காவேரியை
அழைத்து வர அறிவிக்கை
உண்ணாவிரதம் போராட்டம்
இல்லையேல்
அரசுபாடு திண்டாட்டம்
கடவுள்கூட காணாமல் போவார்
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்மு.வ உரை:
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |