பார் இல்லையென்றால்
பீரும் பிராந்தியும்
டாஸ்மாக்கில்
விற்பனை குறைந்துவிடும்
அரசு கஜானா காலியாகிவிடும்..
கடல் நீரையும்
குடி நீராக்கிவிட்டோம்
மழை நீர் இல்லாமல் கூட
தாகம் தீர்ந்து விடும் காலம்
அய்யோ...
மது நீர் இல்லைஎன்றால்
மரித்துப்போகும் அரசு
குடிமக்களே!
கொஞ்சம் கேளிர்!
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |