(இது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் ஏன் காலதாமதமாகிறது...? என்பது பற்றிய ஓர் அலசல் பதிவு.....)
சும்மா கையக் காலை ஆட்டி ஒர் ஆட்டம் போட்டோமா...?
சிங்கம் சிங்களாத்தான் வரும்-னு ஒரு பன்ச் பேசுனோமா...?
அப்படியே பத்து பேர அடிச்சோமா...? துட்ட வாரி பையிலப் போட்டோமா...? என்று இல்லாமல் சூப்பர் ஸ்டார்.........அவதார் படம் போல் மோஷன் கேப்சர் நுட்பத்தில் படம் எடுப்பதாக....ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டார் அதுதான் கோச்சடையான்
அவதார் படம் எடுத்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் திரையில் ஒரு புதிய உலகத்தைக் காட்ட மோஷன் கேப்சர் புதிய தொழில் நுட்பத்தில் திக்கு முக்காடிப் போனார்...ஆம்...ஜேம்ஸ் கேமரூன் இதுவரை மக்கள் யாரும் கேள்விப்படாத ஒரு விசித்திரமான உலகையும் விசித்திரமான மனித உருவங்களையும் அனிமேசன் முறையில் அடுத்த கட்டத்துக்கு வந்தார் புதுமையைக் காட்டினார்... அவர்கள் பேச்சு மொழிகூட அவர் பல அறிஞர்களை வைத்து உருவாக்கினார்.
thanks-YouTube-by officialavatar
2005-ல் கேமரூன் அவதார் படத்துக்கான புதிய அனிமேசன் மனிதர்களைப் பல வல்லுனர்கள் உதவியுடன் 3D உருவத்தில் வரைந்து...2006-ல் அவதார் பட ஸ்கிரிப்ட் வேலைகளைத் துவங்கி...Reality Camera System மூலமாக எடுக்கத் தீர்மானித்தார்....
2007-ல் Weta Digital லார்ட் ஆப் ரிங்க்ஸ் திரைப்படத்துக்கு உதவியவர்கள் துணையுடன்...வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகப் பிரஸ் மீட்டில் தெரிவித்து....கதை விசித்திரமான இன்னொரு கிரக மனிதர்கள் அவர்களது கலாச்சாரம் சுற்று சூழல் பாதுகாப்பு என்றும் அது ஒரு புரட்சிகரமான உணர்ச்சிப் பயணம் என்றும் சொன்னார் (அதுவே உலக அளவில் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியது)
மிகப் பெரிய தொகை ($310 மில்லியன்) செலவில் RealD 3D, டால்பி 3D, XpanD 3D, மற்றும் ஐமேக்ஸ் 3D வடிவமைப்புகளைப் பயன்படுத்தி மோஷன் கேப்சர் படப்பிடிப்பு நுட்பத்தில் டிசம்பர் 2009-ல் திரையில் படம் காட்டி வெற்றி பெற்று பல விருதுகளையும் பணத்தையும் வாரிச் சுருட்டினார்... ஆக அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் 5 ஆண்டுகள் கடுமையான உழைப்பு....
thanks-YouTube-by Kochadaiyaan3D·
ரஜினியின் கோச்சடையான் இவைகளில் எதுவும் சேர்த்தியில்லை...
கதை எழுதியவர் (படையப்பா) கே.எஸ்.ரவிகுமார்...இயக்குவது ரஜினியின் மகள் சௌந்தர்யா (அணிமேசின் தொழில் நுட்பம் அறிந்தவர்)..இருவரும் படத்தின் கதை ஆன்மீகமா...? பாண்டிய மன்னர் வரலாறா...? என்று எதையும் தெளிவாகச் சொல்லாமல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி.....
ரஜினி அஷ்டகோணலில் காலைத் தூக்கிக்கொண்டும் அப்பா-மகன் இரு வேடங்கள் என்றும் 3-D மோஷன் கேப்சர் படப்பிடிப்புத் தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி..........ரூ.125 கோடி மதிப்பீட்டில்........
ஜனவரி,2012-ல் தான் வேலையை ஆரம்பித்தார்கள் அதனால் விரைவில்....? வரும் பொறுத்திருங்கள்..துட்டுக்கேத்த பனியாரம்தான் கிடைக்கும் அப்புறம் தின்னுபுட்டு யாரும் குறை சொல்லாதீர்கள்... தமிழ் திரைப்படம் உலகத்தரம் என்று பெருமை படுங்கள்
***********************************************************
இது சும்மா சரிக்க.....
இவிய்ங்க.... கோச்சடையான் அல்ல....
கோச்சடைகள்.............?
****************************************************************************
ஏய்...யாருடா எங்க அண்ணேன் சூப்பர் ஸ்டாரக் கலாயிக்கிறது...?
ஏய்...நான்தான்டா பவர் ஸ்டார்....புழல் போச்...சடையான்...
நானே வந்துட்டேன்....வெளிய
சூப்பர் ஸ்டார் கோச்...சடையான் வரமாட்டாரா திரையில.........?
(அண்ணேன்...உங்க படத்துல எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க..
அப்புறம் பாருங்க...அவதார் படத்த பீட் பண்ணி...ச்சீ...பண்ணலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |