google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அண்ணேன்..கால் புட்டி மாவீரன் மதுரசம் கொடுங்க...?

Thursday, August 01, 2013

அண்ணேன்..கால் புட்டி மாவீரன் மதுரசம் கொடுங்க...?

http://marubadiyumpookkum.files.wordpress.com/2013/07/02ty_tasmac_wine_s_1414925f.jpg?w=450&h=291

(குறிப்பு-சினிமாவுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கொடுக்கும் போது டாஸ்மாக் சரக்குகளுக்கும் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை ஏன் கொடுக்கக் கூடாது என்று ஒரு குடிமகன் புலம்பல்...சிரிப்பு பதிவு.)

அண்ணேன்...ஒரு கால் புட்டி மாவீரன் திராட்சை மதுரசம் கொடுங்க....? என்று டாஸ்மாக்கில் விற்கப்படும் நெப்போலியன்(Napoleon) பிராந்தியைக் கேட்டால்...விலையில் ஏதும் தள்ளுபடி உண்டா...?

http://img805.imageshack.us/img805/8806/bkd6llyvwq.jpg

அரசுக்கு பல ஆதாயங்களை வரிகளாக அள்ளிக் கொடுக்கின்ற சினிமாவுக்கு  அரசும் நிறையச் சலுகை செய்கின்றன. அதேநேரம் இப்போது வருகின்ற  சினிமாக்கள் டாஸ்மாக் மதுக்கடைக்குப்  பிரச்சாரம்  செய்யும் அரசு பினாமிகள் போன்று படம்காட்டுகின்றன

http://images.desimartini.com/media/versions/main/original/362fe446-5634-49f3-a722-2f8277bf2d6f_original_image_500_500.jpg  

அடக்...கன்றாவியே......சொன்னா புரியாது படம் இதில் உச்சம்...ஆக எச்சம்... படம் முழுக்க வித விதமாகக் குடிப்பது எப்படி...? என்று கதாநாயகனும் போதாக்குறைக்கு கதாநாயகியும் நம்மக் கிட்ட காசு வாங்கிக்கிட்டு சொல்லித்தருகிராயிங்க.........எத்தன தடவை  குடியும் குடிசார்ந்த  காட்சிகள் வருகின்றன..என்ன முடியவில்லை இதுல கொய்யாப் பழம் தின்னா தெரியாது
http://i1.ytimg.com/vi/QGg60SNfIBM/hqdefault.jpg
 
தமிழில் பெயர் வைத்தால்  சினிமாவுக்கு வரிவிலக்கு என்று சினிமாவினால் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் சினிமா முதல்மந்திரிகள் சினிமாவுக்கு மட்டும் சலுகைகள் செய்து அரசு வருமான இழப்பீடு செய்கின்றார்கள்...(அப்பப்பா...மூச்சு வாங்குதே)
அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்து தங்கள் வருமானத்தைக் கூட்டுகிறார்கள் அதற்கு இந்த சினிமா உலகமும் உடந்தை...சரக்கு அடிக்கும் காட்சி இல்லையென்றால் தமிழ் சினிமா ரசிகன் உயிர்விட்டு விடுவானோ...?  

                                    thanks-YouTube-by vikatanwebtvvikatanwebtv

இந்த அநியாயத்தை யாரும் கண்டுகொள்வதில்லை இதனால் தமிழ் வளர்கின்றதா...? முன்பெல்லாம் தமிழில்  பேசுவதற்கு வெட்கப்படுகிற  ...த்தா,...ங்கொமள,ங்கொய்யால... இப்படிச் சில கெட்ட வார்த்தைகளை இப்போது வரும் சில படங்கள் நல்ல வார்த்தைகளாக யதார்த்தம் என்ற பெயரில் சரளமாகச் சொல்கின்றனஅப்படித்தான் சரக்கடிக்கும் காட்சிகள் சர்வசாதாரணமாக படத்தில் நுழைக்கப்படுகின்றன 

http://www.tamilkurinji.in/images_/1344225492mathubankkadai.jpg
 
அவைகள் தமிழில் பெயர் வைத்துள்ளதால் அவைகளுக்கு வரிச் சலுகை பல கோடிகள் அரசுக்கு இழப்பு இதன் பெயர்தான் தமிழ் வளர்ச்சியா...? எம்டன் மகன் என்ற பெயரில் தமிழ் இல்லை என்பதால் என் மகன் ஆனது போல்...
தமிழ் கலாச்சாரத்தை காக்கும் கடமையாக....கண்ணியமாக...  கட்டுப்பாடாக தமிழ் படம் எடுப்போருக்கே வரிச்சலுகை என்று அரசு சட்டம் கொண்டுவந்தால்....இந்தச் சினிமாக்கள் எப்படியிருக்கும்...?

இங்கே ஒரு குடிமகன் கேட்கின்றேன்....டாஸ்மாக்கில் விற்கப்படுகின்ற   விஷ்கி...பிராந்தி...பீர்...போன்றவைகளை இனிமேல் வெளிநாட்டுச் சாராயம் என்று தமிழில் அழைப்போம்...
அப்படியே நெப்போலியன் பிராந்தியை  மாவீரன் மதுரசம் என்போம் 
ஹாப்சன்ஸ் பிராந்தியை அப்பாமகன் என்று அழைப்போம்

உங்களுக்காக ஆங்கிலம்-தமிழ் அகராதியைத் தேடி......
Whisky-(விஸ்கி)-ஊறல் 
Brandy-(பிராந்தி)-திராட்சை மது ரசம்  
beer-(பீர்)-கோதுமை புளித்தண்ணி ...ஹி..ஹி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJWcCoBqMvrsndglsRKcEcLYFuff2_dEzcOPwyfOaIBQK9G1DzTHjpoAdOgFbqVyjv9WlfB1StXu3zef2q65fvwiUxWoTfIq-3PkmkYyr9eNKNfKf35Alr9E6hfCBoYUN3GAyeEli2_MJM/s1600/tamilmakkalkural_tasmacber.jpg
 
இப்படி அத்தனையும் தமிழ் பெயராக்கினால் 
வரிச்சலுகை கிடைக்குமா..?
மதுப் புட்டிகள் விலை குறையுமா...?

சினிமாவுக்கு ஒரு நீதி..குடிக்கு ஒரு நீதியா...? 
இங்கே மதுக்கடைகள்  இருந்துவிட்டுப் போகட்டும்.......?
மக்கள் நல அரசுகளே! மது அருந்தும் பார்களை இல்லாமல் செய்யுங்கள்..வாகன விபத்துக்கள் குறையும்...
வீடுகளில் போய் அருந்தட்டும் குடிமகன்கள் 
அப்போதுதான் இந்த சமுதாயம் சீரழிவிலிருந்து மீளும் 

freeonlinephotoeditor

  டாஸ்மாக்கடைகளில்.....

அண்ணேன்..ஒரு கால் புட்டி மாவீரன் மதுரசம் கொடுங்க...?  
என்று கேட்டால் தள்ளுபடி கிடைக்குமா...?

(என்னடா இது....ஊரெல்லாம் உண்ணாவிரதம் இருக்கிறாயிங்க...இவன் என்னடானா இப்படி உளறுகிறான் என்று நினைக்காதீங்க....இப்ப காந்திஜியே பிறந்து வந்து மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருந்தாக் கூட....அவருக்கும் குளுக்கோஸ் ஏத்தி உள்ள போட்டுப்புடுவாயிங்க...ஏதோ நம்மளால முடிஞ்சது...இப்படி எதையாவது எழுதி எங்கே ஓட்ட இருக்கோ அதைச் சொல்லுவோம்...அவிங்க அடைச்சா அடைக்கிறாயிங்க..)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1