google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சென்னை-மாநகரமா? மாபெரும் நரகமா?

Sunday, September 22, 2013

சென்னை-மாநகரமா? மாபெரும் நரகமா?

நாலு நாட்கள் 
தொடர் மழை 
நாறிப் போகுது 
சென்னை நகரம் 



சாலைகள் 
இங்கே 
புதைகுழிகள் 

சாக்கடைகள் 
இங்கே 
நோய்க்கடைகள் 



மக்கா...
டாஸ்மாக்கில் 
ஒரு கட்டிங்கோ 
குவார்டரோ 
வசதிக்கு தக்க 
வாங்கி ஊத்தி...

http://rajshankar.files.wordpress.com/2013/06/amma-canteen.jpg?w=570

அம்மா உணவகத்தில் 
1 ரூ...இட்லி 
அயிந்தோ பத்தோ 
அப்படியே விழுங்கி...

எப்படியோ உடம்பை
தெம்பாக  வைத்திரு...?

டெங்கு..மலேரியா 
கொசுக்களுக்கு 
இரத்ததானம் செய்து...
எப்படியோ உடம்பை
தெம்பாக  வைத்திரு...!
அடுத்த தேர்தல் 
விரைவில் வருகிறது

(அண்ணேன்.......
(அப்)பாவி குடிமக்களைத்தான் 
அவைகள் கடிக்குமாம்..
அவர்கள் இரத்தம்தான் 
அவைகளுக்கு இனிக்குமாம்.

டாஸ்மாக் குடிமக்கள் இரத்தம் 
அவைகளுக்கு குமட்டுமாம்...?)

அடேய்...தம்பி!
கொசுக்கடியைவிட 
விஷக்கடியாக இருக்கு...?
இவியிங்க கடி.....

(எவியிங்க...? என்று 
என்னிடம் யாரும் கேட்காதீர்கள் 
நீங்கதான் எல்லாம் தெரிந்த 
நியாயன்மார்களாச்சே..........)
   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1