google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மூடர் கூடம்-சினிமா விமர்சனம்

Friday, September 13, 2013

மூடர் கூடம்-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-மூடர் கூடம் படம்... சூப்பர்...பரவாயில்லை...மொக்கை...என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்...அது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்னைப் பொறுத்தளவில் தமிழ் திரையில் இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி)

freeonlinephotoeditor

படம் ஆரம்பிக்கும் போதே இலக்கு முக்கியமல்ல பயணம் எப்படிப்பட்டது என்று புத்தர் சொன்னதாக ஆரம்பிக்கிறார் அறிமுக இயக்குனர் நவீன்...அப்படித்தான் படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமல்ல படத்தை எப்படி சொல்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறார்...



கதை-நான்கு பைத்தியக்காரத்தனமான முட்டாள்தனமான  சின்ன லோ-கிளாஸ் திருடர்களிடம் மாட்டிக்கொண்ட ஒரு ஹைகிளாஸ் கோடி கேடியும் அவரது குடும்பமும் படும் நகைச்சுவை அவஸ்தைகள்

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வாழமுடியாமல் தவிக்கும் நவீன்,முட்டாள்கள் தனமாக திருடிப் பிழைக்கும் குபேரன்,வெள்ளை,சென்றாயன்..  இவர்கள் நான்குபேரும்   வசதியான வெள்ளையின் மாமா (ஜெயபிரகாஷ்) வீட்டில் திருடச் செல்ல...

அங்கே  திருட எதுவும் கிடைக்காததால் அவரையும் வீட்டில் உள்ள அவரது மனைவி,மகள் (ஓவியா),மகன் சிறுவன்,ஒரு பெரியவர்...இவர்களை தனியறையில் அடைத்து வைக்க... 

இன்னொரு கதையாக ஜெயபிராகாஷ் வீட்டில் உள்ள மேற்படி கோல்மால் பட வீடியோ சி.டியையும் ஒரு பொம்மையையும் ஒரு கேடி கோடிஸ்வரர்  திருடிவரச் சொன்ன திருடனும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அந்த அறையில் அடைக்கப்பட....

இன்னொரு கதையாக ஜெயபிரகாஷ்-க்கு 2 கோடி கடன்கொடுத்த சேட்டு அடியாட்களுடன் அந்த வீட்டுக்கு வரும் போது அவர்களை இந்த நான்குபேரும் அடித்து அடியாட்களை தனியறையில் அடைத்துவைக்க...


freeonlinephotoeditor


இன்னொரு கதையாக அடித்து விரட்டப்பட்ட சேட்டு இன்னொரு தமிழ் தெரிந்த தாதா சேட்டை அழைத்துகொண்டு துப்பாக்கியுடன்  அந்த வீட்டுக்கு வர...

இன்னொரு கதையாக சேட்டின் அடிபட்ட ஆட்களை மீட்க புதுப்பேட்டை ஆட்டோ குமாரும் அவரது ஆட்களும் அந்த வீட்டுக்கு வர...

இன்னொரு கதையாக ஜெயபிரகாஸ் மகள் ஓவியாவைத்  தேடி அவளது காதலன் அந்த வீட்டுக்கு வர...அவரையும் அந்த தனியறையில் அடைத்துவைக்க..

ஜெயபிரகாஸ் வீட்டு வேலைக்காரி மகள் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வேலைக்காரி அந்த வீட்டுக்கு வர...அவளையும் அறையில் அடைத்து வைக்க 

இதற்கிடையில் சீட்டுகம்பேனி நடத்தி பணத்தை ஏமாற்றி  ஜெயபிரகாஸ் குடும்பத்துடன் துபாய்க்கு தப்பிச்செல்ல அவரது பார்ட்னர் 2 லட்சம் பணம்...டிக்கட்டுடன் அந்த வீட்டுக்கு வர.... 


freeonlinephotoeditor

இதற்கிடையில் சி.டி யையும் பொம்மையையும் திருடிவரச் சொன்ன  கோடிஸ்வரர் கேடியும் துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்கு வர... கடைசியில் போலிசும் அந்த வீட்டுக்கு வர....
இங்கே இப்படி  முட்டாள்களாக குவியும் இடம்........மூடர் கூடம் 

இப்படி கோமாளித்தனங்கள் கிறுக்குத்தனங்கள் செய்யும் அந்த நான்கு முட்டாள்களும் கடைசியில் தப்பித்தார்களா..? என்பதுதான் கதை 

அதை சிலநேரங்களில் சிரிக்கும் படியும் சில நேரங்களில் கடிக்கும் படியும் வித்தியாசமாக சொல்கிறார்...இயக்குனர்...நடிகர் நவீன் 

இன்னும் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான (பிளாஸ்-பேக்) முன்கதையும் உண்டு...அந்த வீட்டு நாய்க்கும்கூட ஒரு முன் கதை உண்டு. அந்த பொம்மைக்கும் ஒரு முன்கதையும் பாட்டும் உண்டு  


freeonlinephotoeditor


பாடல்களும் இசையும் வசனமும் எல்லாவற்றிலும் மாற்றியோசி...த்திருக்கிறார்கள் மீண்டும் யேசுதாஸின் குரலில் நீயும் பொம்மை...பாடல் அருமை.குத்து பாட்டு,அடிதடி,விரசமான காதல்...இல்லாமல்  புதுமையாக முயற்சி செய்த இயக்குனரை பாராட்டலாம் 


freeonlinephotoeditor

 
(படத்தில் அந்த மூடர் கூடம் இப்படி முட்டாள்களால் ஹௌஸ்-புல்..அரங்கிலும் கொஞ்சம் கூட்டமிருந்தது என்னையும் சேர்த்து...எங்களில் யார் முட்டாள்கள் என்பது தெரியவில்லை...படமுடிந்து வெளியே வரும்போது நான்கு பேர் கையில் மைக்..வீடியோ கேமராவுடன் நின்று...படம் எப்படி சார்...? என்றார்கள்...நான் முதல் ஆளாக தப்பி வெளியே வந்துவிட்டேன் மற்றவர்கள் என்ன சொன்னார்கள்...? எனக்கு தெரியாது)    


                           thanks-YouTube-bypasangaproductions pasangaproductions

ஆனால்...படம் எப்படியிருக்கு? பார்க்க போகலாமா? என்றால் என் பதில் இதுவாகத்தான் இருக்கும்...(அவரவர் மனநிலைக்குப்படி இப்படித்தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்....)

மூடர் கூடம் படம்... சூப்பர்...பரவாயில்லை...மொக்கை...


யாரும் பேசாமல் எப்படி உலகநாயகர் பேசும் படம் எடுத்து சினிமா ஆய்வு செய்தாரோ அதுபோல இயக்குனர் நவீன் எல்லோரையும் அதிகமாக பேசவைத்து மூடர் கூடம் மூலம் உலக சினிமா ஆய்வு செய்துள்ளார்......ஹை-கிளாஸ்-க்கு பிடித்த லோ-கிளாஸ் மனிதர்கள் பற்றிய படம் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1