தமிழில் தரிகிடத்தோம் போட்டுக்கொண்டிருந்த நடிகை அஞ்சலியை தெலுங்கில் ஒரே படத்தில் நட்சத்திர நடிகையாக்கிய.....சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு (சீதம்மா வீட்டு முற்றத்தில் மல்லிகைச் செடி) என்ற படம் இப்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆனந்தம் ஆனந்தமே என்று.....
ஸ்ரீகாந்த் அட்டால ( Srikanth Addala) இயக்கத்தில் மகேஷ் பாபு-வெங்கடேஷ் இரு கதாநாயகர்களாக அஞ்சலி-சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள 2013-ஜனவரியில் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய இத்திரைப்படம் டோலிவுட் வரலாற்றில் 120 கோடிக்கு மேல் அதிக வசூல் செய்த திரைப்பட வரிசையில் இடம்பிடித்தது.
இப்படத்தின் கதை..........பிரகாஷ் ராஜின் மகன்கள் வெங்கடேஷ்-மகேஷ் பாபு இருவரின் காதல் காட்சிகள் நிறைந்த குடும்பக் கதை
பிரகாஷ் ராஜ் எடுத்து வளர்க்கும் இறந்துபோன தனது பணக்கார தங்கை மகள் அஞ்சலிக்கு தனது மூத்தமகன் வெங்கடேஷை திருமணம் செய்ய நினைக்க...அதை அஞ்சலியின் இன்னொரு உறவினர் ராவ் ரமேஷ் எதிர்க்கிறார்.
அதே நேரம் ராவ் ரமேஷின் மகள் சமந்தாவை மகேஷ் பாபு டாவ் அடிக்க..........இப்படி ஒன்றாக இருந்த அண்ணன்-தம்பி இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்படுகிறது
கடைசியில் படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் ஸ்ரீ ராம நவமி கல்யாணம் நடிபெரும் பத்ராச்சலம் கோவிலில் சந்திக்க... அங்கே ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெங்கடேஷும் மகேஷ் பாபுவும் அனைவரையும் காப்பாற்ற........ராவ் ரமேஷ் மனம் மாறி அஞ்சலியை வெங்கடேஷும் தனது மகள் சமந்தாவை மகேஷ் பாபுவும் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்...............சுபம்
thanks-YouTube-by telugufilmnagar
அதிரடிச் சண்டைகளையும் ஆபாச குத்துப்பாட்டுகளையும் மட்டுமே விரும்பிப் பார்க்கும் ஆந்திர ரசிகர்கள் இப்படிக் காதலும் காமெடியும் நிறைந்த சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு என்ற குடும்பப் படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச்செய்தது இன்றுவரை டோலிவுட் கனவுத்தொழிச்சாலையின் விடை தெரியாத மர்மம்.... எல்லாம் அஞ்சலி மாயமா....?
thanks-YouTube-by telugufilmnagar
இப்படம் தமிழில் கல்லா கட்டுமா......? இங்கே காமெடி என்ற பெயரில் டாஸ்மாக் ஆதரவு படங்கள் மட்டுமே கல்லா கட்டும் இந்த நேரத்தில் ஆனந்தம் ஆனந்தமே என்ன ஆகுமோ...?
(அண்ணேன்.......நம்ம கோடம்பாக்கம் சினிமா ஜோசியர் சொன்னாரு..இப்ப அஞ்சலிக்கு சுக்கிர திசையாம்....சிங்கம் 2-ல கூட அஞ்சலி ஆரம்பத்தில போட்ட குத்து ஆட்டத்தாலத்தான் சிங்கம் சூடு பிடிச்சி... வசூல் அள்ளிக்கிச்சாம்...
இப்பகூட ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அஞ்சலியோட ஒரு பிட்டு குத்தாட்டம் போட்டாப் போதும்...அண்ணேன் அய்யோ பாவம் நம்ம மிஷ்கின் அண்ணனுக்கு நோட்டிஸ் ஓட்டுற வேலை மிச்சம்....வசூல் அவரு வீட்டு கூரையைப் பியித்துக்கிட்டுக் கொட்டும்.........ஆனந்தம் ஆனந்தமே
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |