google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம் 2-விரக்தியில் கமல்?

Tuesday, October 08, 2013

விஸ்வரூபம் 2-விரக்தியில் கமல்?

என் படத்தை யாரும் மறுபடியும் தடுத்தால்....நான் இந்த நாட்டை விட்டுப் போய்விடுவேன்....அதனால் யாரும் என் விஸ்வரூபம் 2 -க்கு போட்டியாக தடையோ வடையோ சுடாதீர்கள் என்று சொல்லும் உலகநாயகரே...........

http://english.globalgujaratnews.com/uploads/news/01_2013/1359613964_kamal-haasan-photos.jpg

இப்போதைய சினிமாக்கள் அரசுக்கு ஆதரவாக டாஸ்மாக் பிரச்சாரம் செய்துகொண்டு போதையில் கூத்தாடுது......
 இப்போது உங்கள் படம்  டாஸ்மாக் தண்ணி அடிக்காத காட்சிகளோடு வந்தால்...ரசிகர்கள் உங்களுக்கும் தண்ணி காட்டினாலும் ஆச்சரியமில்லை

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1240066_219443611547528_1710499282_n.jpg


மீண்டும் விஸ்வரூபம் 2 வில்லங்கம் செய்யுமா...? செய்யும் 
உலகநாயகரே!  உங்கள் விஸ்வரூபத்தில் அரசியல் உள்குத்து இருந்தால்.....(அண்ணேன்...அரசியல்வாதிகள் இருக்காயிங்களே... அவ்வியிங்க உங்களைவிடப் பெரிய நடிகங்க....)

viswaroopam

இந்தத் தடவை உமது படத்திற்கு எதிராக எவரும் தடை செய்யவோ தடை கேட்கவோ மாட்டார்கள்...(அண்ணேன்....இப்பலாம் வேற டெக்னிக் வச்சியிருக்கிராயிங்க இப்படித்தான் சும்மாக்காட்டியும் வெடிகுண்டு வைப்போம் என்று மொட்டைக் கடுதாசி போட்டு தலைவா-வை மொட்டை அடிச்சாயிங்க....)


http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/08/Vishwaroopam-2.jpg


உங்கள் படைப்பில் நீங்கள் ஒரு நல்ல கலைஞன் என்பதிலிருந்து கலாச்சாரக் கொலைஞன் என்று முலாம் பூசப்பட்ட காட்சிகள் இருந்தால்........
மீண்டும் விஸ்வரூபம் 2 வில்லங்கம் செய்யுமா...? செய்யும் 




இப்போது வரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம்.... பிரச்சனைக்கு உள்ளான விஸ்வரூபம் முதல்படத்தின் கதை தொடர்ச்சி என்றும் அதன் கதைக்களம் இந்தியா என்றும் சொல்லப்படுகிறது........ஆனால்



இந்தப் படத்தில்  அம்மா-மகன்  உணர்வுப் போராட்டமே முக்கியத்துவம் என்றும் (அது தமிழ் நாட்டு அம்மா பற்றி இல்லாமல் இருந்தால் சரிதான்...) அதற்காகவே செங்கல்பட்டில் பிறந்து பாலிவுட்டில் கோலோச்சிய பரத நாட்டிய அம்மா வஹீதா ரகுமானை தேர்வு செய்திருப்பது தங்கள் கலையுணர்வின் வெளிப்பாடு...... 

                                    thanks-YouTube-by GPeditz

இப்போது தமிழ் சினிமாவாதிகளும் திரையரங்க முதலாளி முதலைகளிடம் மாட்டிக்கொண்டு வேதனையில்...இதையெல்லாம் அறிந்த அறிவுஜீவியான நீவீர் அன்றே DTH-ல் வெளியிட முனைந்தது நியாயமே... கோடிகள் செலவு செய்து உயிரைக்கொடுத்து உழைத்து ஒரு படம் எடுத்தால்....அதைப் படம் காட்ட இந்தக் கோல்மால்  பாப்கான் வியாபாரிகள் செய்யும் சோப்ளாங்கித் தனங்கள் கொஞ்சமல்ல...நஞ்சு.... இங்கேயும் உமது புதுமைகள் தொடரட்டும்..........


உண்மையான கலைஞனை யாரும் பொய்யால் புதைக்க முடியாது.உமது நிழல் பயணமும் நிஜப் பயணமும் சரியானப் பாதையில் போகட்டும் .... சரித்திரம் படைக்கட்டும்......அச்சம் என்பது மடமை...அஞ்சாமை கலைஞனின் உடமை   என்று தொடரட்டும் உமது வெற்றிப்பயணம்  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1