சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் பாடல்களின் மதிப்பீடு வலைதளங்களில் சிறப்பாக பாராட்டப்படுகின்றன....படத்தின் வெற்றியின் எதிரொலியாக இது கருதப்படுகின்றன உங்கள் பார்வையில்.........கோச்சடையான் படப் பாடல்கள் எப்படியிருக்கு?
1-எங்கே போகுதோ வானம்
ஒரு போர் வீரனின் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் வைரமுத்து வார்த்தைகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் கம்பீரமான குரலில் மேளதாளத்துடன் வயலின் இசையும் கலவையாக.......
2-மெதுவாகத்தான்
அமரகவி வாலியின் காதல் ரசமிக்க வார்த்தைகளில் ஒரு மெல்லிய நாதம் சாதனா சர்கம்-எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொஞ்சும் குரல்களில் ஏ.ஆர்.ரகுமானின் நவீன இசையும் பாராம்பரிய மிருதங்கம்,வீணை இசைக்கலவையாக.....
3-மாற்றம் ஒன்றுதான் மாறாதது
ரஜினிகாந்த் தன் கம்பீரமான குரலில் வைரமுத்துவின் வீர வசனகவிதையாக வாசிக்க ஹரிசரண்-உமாசங்கர் கோரஸில் கேட்பவரை கவனிக்க ஈர்க்கின்றது இசை இங்கே இரண்டாம் பட்சமாகப் போனது.....
4-மணப்பெண்ணின் சத்யம்
அற்புதமான பாராம்பரிய இசையுடன் தென்றலென பியானோ ஓசையும் இழைந்தோட வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு லதா ரஜினிகாந்த் குரலில்....ஏ.ஆர்.ரகுமானின் விருப்பமான ரோஜா பட வரிசையில் வரும் துடிப்பான இசை.......
5-இதயம்
காதலுக்கும் வீரத்துக்கும் இடையில் சமநிலையாக கர்னாடக இசைப்பானியில் வைரமுத்துவின் அடுக்கப் பட்ட வார்த்தைகள் பாடகி சிமாயிக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ்க்கும் சவாலாக ஏ.ஆர்.ரகுமானின் பாராம்பரிய கர்னாடக இசையின் எல்லைதாண்டிய பரிணாமம்......
6-எங்கள் கோச்சடையான்
கேட்பவர்மனதில் ஓர் கற்பனைச் சூழலை விதைக்கும் வல்லமை கொண்ட கோரஸ் ஒலியுடன் ஏ.ஆர்.ரகுமானின் பாராம்பரி இசைக்கருவிகளின் பின்னணி இசையும் வைரமுத்துவின் கதைக்கருவை சுமந்து வரும் வார்த்தைக்களுமாக......
7-மணமகனின் சத்தியம்
மீண்டும் பாடப்பட்ட ஒரு சிறு பாடல்......ஹரிசரண் குரலில் மறு பதிவாக வரும் இப்பாடல் வைரமுத்துவின் வார்த்தை விளையாடலுக்கு ஓரு எடுத்துக்காட்டு..........
8-கர்மவீரன்
ஏ.ஆர்.ரகுமான்-ஏ.ஆர்.ரைஹனா இருவரின் ஆவேசமான குரல்களில் மூச்சடைக்க வைக்கும் இசையில் கேட்பவரை ஆச்சரியக்கடலில் மூழ்கடித்து..மகிழ்ச்சியில் திளைக்க வைக்கின்றது
உங்கள் பார்வையில்...
கோச்சடையான் படப் பாடல்கள் எப்படியிருக்கு?
நீங்கள் கேட்டவைகளில்.....
உங்களுக்கு பிடித்த பாடல் எது....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-17/3/2014
கோச்சடையன் சௌந்தர்யா-தமிழ் சினிமாவின் பாரதி கண்ட புரட்சி பெண்... http://t.co/mm9EkqCD6B
— பரிதி.முத்துராசன் (@PARITHITAMIL) March 8, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |