google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்-சாகடிக்கிறாயிங்கப்பா....

Tuesday, April 08, 2014

ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்-சாகடிக்கிறாயிங்கப்பா....

ஒரு கண்ணியும் மூனு களவானிகளும் என்று படம் காட்டி படம் பார்க்கப் போனவங்கள சாகடிக்கிறாயிங்கப்பா என்று நொந்து கொண்டு வந்தார் நண்பர்....

சிம்புதேவன் இயக்கிய காதல் காமெடி படம்தானே என்று பார்க்கப் போனேன் அங்கே சிவ பெருமான்,நாரதர், பிரமா...என்று மூன்று பேரைக்காட்டி பேண்டஸி படம்னு பயம் காட்டுறாயிங்கப்பா....

மனித  வாழ்க்கையில் நேரம் தவறாமையின் முக்கியத்துவத்தை சொல்வதாகச் சொல்லி நம்ம நேரத்தையும் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு.....

ஒரு டிக்கட்டுக்கு ஒரு  படம் ஆனால்...அந்த ஒரே படத்தில  ஒரே கதையை மூன்று வித நிகழ்வுகள் என்று சிம்புதேவன் ஒரு புது டெக்னிக் உபயோகப்படுத்தி மூன்று படம் காட்டியதே......ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்

மலேசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் வெள்ளையும் சொள்ளையுமான ஹிப்பி லகிரி (நாசர்) தன் எதிரி ஆரோக்கியத்தின்  மகள் இஷபெல்லா (அஸ்ரிதா ஷெட்டி) வின்  திருமணத்தை தடுத்து நிறுத்த..........

ஆள் கடத்தும் திருடனும் இஷபெல்லாவின் காதலனுமான தமிழ் (அருள்நிதி)  என்ற களவானியை முப்பது லட்சம் கூலிக்கு நியமிக்க.....

தமிழ் தன் நண்பர் ராமானுஜம் (பகவதி பெருமாள்), மலர் (பிந்து மாதவி) இருவருடன் சேர்ந்து இஷபெல்லாவை  கடத்துவதை......

ஒரு நொடி,இரண்டு நொடி,மூன்று நொடி...தாமதத்தினால் என்ன நடக்கும் என்பதை மனித பூச்சிக்களுக்கு கடவுள் பூச்சிகள் படம் காட்டுவதாக.....

இயக்குனர் கடவுள் சிம்புதேவன் நமக்கு காமெடியாக மூன்று விதங்களில் சொல்வதே...........ஒரு கண்ணியும் மூனு களவானிகளும் (சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க முடியலே...)

சர்ச்சில் திருமணம் நடக்கும் போது கடத்துவதாக பிளான் பண்ணும தமிழ் ஒரு பொம்மை வடிவிலான நிஜ துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் ராமானுஜம்,மலர் இருவருடன் இஷ்பெல்லாவை கடத்தச் செல்கின்றார்கள் வழியில் தடங்கலாக நாயர் (மனோபாலா) டீக்கடையில்   சிரிப்பு என்கவுண்டர் போலிஸ் (ஆடுகளம் நரேன்) ஒருவரை சந்தித்து நேரம் கடக்கின்றது...

அப்புறம் ஊழல் போக்குவரத்து போலிஸ் (அருள்தாஸ்) ஒருவருடன் கொஞ்சம் நேரம் கடக்கின்றது....

இன்னும்  பிளாஷ்-பேக் கதையாக பெரிய நட்சத்திர ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள தன் தாயை தமிழ் சந்திப்பதில் கொஞ்ச நேரம் கடக்கின்றது...

கடைசியில் சர்ச்சில் கிருஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு தமிழ் நண்பர்கள் ராமானுஜம்,மலருடன்  இஷபெல்லாவை கடத்த முயற்சிக்க......

முதல்  இரண்டு முறை நேரம் சரியில்லாமல் விதிவசத்தால் தோல்வி அடைவதாகவும் மூன்றாவது முறையாக தமிழ் எப்படி தன் காதலி இஷபெல்லாவை கரம் பிடிக்கின்றார் என்றும் ஹிப்பி லகிரியிடமிருந்து ரூபாய் முப்பது லட்சத்தை பெறுகின்றார் என்றும் சிம்புதேவன் அவர் சிரிக்க சிரிக்க காமெடியாக....? சொல்லியிருக்கின்றார்....

அதேநேரம்....அவருக்கே உரிய சமுதாயச் சாடலாகவும் நையாண்டித் தனமாகவும்  பெரிய தனியார் மருத்துவ மனைகளில் நடக்கும் கொள்ளைகளையும் போக்குவரத்து போலீசாரின் சில்லறை ஊழல்களையும் நக்கலாக  கிண்டலடிக்கின்றார் 

பொதுவாக பேண்டஸி படம் என்றாலே.........படம் பார்ப்பவர்களை அரைப் பைத்தியங்களாக நினைத்துக்கொண்டு கதை சொல்வார்கள் ஆனால்... இயக்குனர் சிம்புதேவன் அண்ணன் நம்மளை முழுப் பைத்தியமாக எண்ணி படம்காட்டுவதே............ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்

முதல்  கடத்தல் காட்சியில்.......கடத்தப் போகிற கதாநாயகன சாகடிக்கிறாயிங்க......

இரண்டாவது கடத்தல் காட்சியில்.....யாரோ சாகிறாங்க (எனக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமோ? சரியா நியாபகம் வரல்ல...தாத்தா ரகவனா....?ஆங்)

மூன்றாவது கடத்தல் காட்சியில்............சிவபெருமான் தன் திருவிளையாடலாக ஐந்து பேரச் சாகடிக்கிறாருப்பா.... (அந்த ஐந்து பேர்....யார்? என்பதுதான் படத்தின் மிகப் பெரிய ட்விஸ்ட்) அவ்யிங்க யாருன்னு நான் சொல்லமாட்டேன்....நீங்களே போய் தெரிஞ்சிக்குங்க... ஹி...ஹி.....RUN LOLA RUN 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1