google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரண்மனை Vs ஆயிரம் ஜென்மங்கள்

Wednesday, September 24, 2014

அரண்மனை Vs ஆயிரம் ஜென்மங்கள்



இயக்குனர் சுந்தர் சி-யின் அரண்மனை திரைப்படம் மளையாள யட்ச கானம் படத்தின் தமிழ் ரீமேக்கான ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அப்பட்டமான காப்பி  என்று.....

ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையாக.....

விஜயகுமார் அவரது மனைவி  லதா,லதாவின் அண்ணன் ரஜினிகாந்த் மூவரும் விஜயகுமாரின் எஸ்டேட்க்கு விடுமுறையை கொண்டாட செல்லும்போது...

எஸ்டேட்டில் லதா மட்டும்  நடுராத்திரியில் பாடிக்கொண்டு செல்லும் ஆவிப் பெண்  பத்மபிரியாவை காண்கிறாள் அன்றே அந்த  ஆவி லதாவின்  உடலில் புகுந்து அவளது நடவடிக்கையை மாற்றி  லதாவும் நடுஇரவில்  காட்டில் பாடிக்கொண்டு அலைகிறாள் 

லதாவின் மாறுபட்ட நடவடிக்கையை கண்ட ரஜினிகாந்த் அவளைப் பின்தொடர்ந்து சென்று  விஜயகுமாருக்கும் அவரது  முன்னாள் காதலி பத்மபிரியாவுக்கும் உள்ள காதலையும் அவளது முறைமாமனால் கற்பழிக்க விரட்டப்பட்டு அவள் தற்கொலை செய்து கொண்டதையும் அறிகிறார்

லதாவின் உடம்பில் புகுந்த பத்மபிரியாவின் ஆவி மீண்டும் தன் காதலன் விஜயகுமாருடன் ஒரு பவுர்ணமி தினத்திற்குள் ஓன்று சேர்ந்தால்  நிரந்தரமாக அவள் உடலில் தங்கிவிடும் என்பதை அறிந்த ரஜினிகாந்த் அவர்கள்  இருவரும் ஓன்று சேரவிடாமல் தடுக்கிறார் 

கடைசி நாள் பவுர்ணமி தினத்தன்று ஆவி பத்மபிரியா ரஜினிகாந்தை ஏமாற்றிவிட்டு விஜகுமாரை நள்ளிரவில் காட்டுக்கு அழைத்துச் சென்று ஓன்று சேர முயலும் போது........

லதாவின் அழுகுரல் கேட்டு  எழுச்சிக் கொண்டு எழுந்த ரஜினிகாந்த்  அவர்களை விரட்டிச்  சென்று இணையவிடாமல் தடுக்க....பவுர்ணமியும் முடிய...பத்மபிரியா ஆவி லதாவின் உடலைவிட்டு பிரிந்து மறைந்து விடுகிறது..........சுபம் 

அரண்மனை படத்தின் கதை...........

 வினய்,அவரது மனைவி ஆண்ட்ரியா மற்றும் உறவினர்கள் (மனோபாலா, கோவை சரளா,சித்ரா லட்சுமணன்,நிதின் சத்யா,ராய் லட்சுமி,சுந்தர் சி) உடன் கிராமத்திலுள்ள பரம்பரை அரண்மனையை  விற்பதற்கு வரும் போது......


ஐந்து வருடங்களுக்கு முன்பு கிராமத்து அரண்மனைக்கு வந்த வினய்-யுடன் காதல் கொண்ட கோயிலில் வளர்ந்த அபூர்வ சக்தி கொண்ட கிராமத்து பெண் ஹன்ஷிகா......
 வினய்-யின் மனைவி ஆண்ட்ரியாவின் உடம்பில் ஆவியாக  புகுந்து.....

அம்மன்  சாமி நகைகளை  களவாடிய சரவணன் அவனது கூட்டாளிகளை தன் அபூர்வ சக்தியால் கண்டுபிடித்ததால்  தன்னை   உயிருடன் அந்த அரண்மனையில் புதைத்து கொலை செய்தவர்களை பழிவாங்குவதுடன்... 

அவள் விரும்பிய காதலன் வினய் உடன் ஒரு சூரிய கிரகண நாளுக்குள் உடலுறவு கொண்டால் நிரந்தரமாக தங்கிவிடலாம் என்று ஓன்று சேர துடிக்கிறாள்

இதை  அறிந்த ஆண்ட்ரியாவின் அண்ணன் சுந்தர் சி அவர்கள்  வினய்-ஆண்ட்ரியா இருவரையும் ஓன்று சேரவிடாமல் தடுப்பதுடன் 
அந்த சூரிய கிரகணத்தன்று ஒரு சாமியார் சக்தியால் ஆண்ட்ரியாவின் உடலிலிருந்து ஹன்ஷிகாவின்  ஆவியை விரட்டுகிறார்......சுபம்

ஒற்றுமையும் வேற்றுமையும்..........

அரண்மனை - ஆயிரம் ஜென்மங்கள்  இரண்டு படங்களுமே தன் காதலனின் மனைவி உடம்பில் புகுந்த காதல் பேய்களை  கில்லாடி அண்ணன்கள் விரட்டுவதை படம்காட்டுகின்றன

ஆனால்........

இரண்டு படங்களுமே திரைக்கதை,காட்சிகளால் அதைச் சொல்லிய விதத்தில் மாறுபடுகின்றன 

ஆயிரம் ஜென்மங்கள் படம் திகிலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க அரண்மனை படம் பழிவாங்கும் திகிலுடன் நகைச்சுவைக்கு முக்கியத்தும் தருகிறது 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1