சமுதாயத்தில் பசும் தோல் போர்த்திய புலியாக அலையும் கெட்டவனை நல்லவன் அழிக்கும் பழைய கள்ளுதான் என்றாலும் மோகன் ராஜாவின் விறுவிறுப்பான திரைக்கதையால் படு பயங்கரமான த்திரிலர் திரைப்படமாக வந்துள்ளது....தனி ஒருவன்
ஐ.பி.எஸ்.பயிற்சியில் இருக்கும் போதே ஜெயம் ரவி தன நண்பர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன குற்றங்களை செய்யும் சில குற்றவாளிகளை கண்டுபிடித்து போலீஸ்க்கு தகவல் கொடுக்கிறார்
பயிற்சி முடிந்ததும் அந்தக் குரவாளிகளுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல்வாதி தம்பி ராமையா, மருத்துவ விஞ்ஞானி அரவிந்த சாமி இருவரையும் தண்டிக்க நினைக்கிறார்
ஜெயம் ரவியின் செயல்பாடுகளை டிராக்கிங் டிவைஸ்’ கருவி மூலம் அவரது உடலில் ரகசியமாக பதித்து பதிலடி தரும் வில்லன் விஞ்ஞானி அரவிந்த சாமியையும் கொடூர சிரிப்பூட்டும் அரசியல் வில்லன் தம்பி ராமையாவையும்....
தன்னுடன் பயிற்சி அதிகாரியான நயன்தாராவுடன் கிளுகிளுப்பாக காதல் செய்தபடி ஒருவனாக ஜெயம் ரவி எப்படி அழிக்கிறார் என்பதை......
இயக்குனர் மோகன் ராஜா காட்சிக்கு காட்சி திகிலுடன் நடுங்க வைக்கிறார் நகைச் சுவையை ஒரு குறுகிய வட்டத்திலும் காதலை நளினமாகவும் காட்சிபடுத்தி திகில்,சஸ்பென்ஸ், சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்வையாளர்களை இருக்கையின் விளிம்புக்கே கொண்டுவருகிறார்
எழுத்தாளர் சுபாவுடன் இணைந்து வசனங்களால் கலக்குகிறார்
ஜெயம் ரவிக்கு பேராண்மை-க்கு பிறகு அவருக்கு ஒரு முக்கிய படமாக அமையும்
அதே நேரம் அரவிந்த் சாமியோ அதி பயங்கர வில்லனாக அறிமுகமாகியுள்ளார்
நயன்தாரா-கிளுகிளுப்பு ,தம்பி ராமையா-ஒரு வரி காமெடி வில்லன்
ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்களும் மிரட்டும் இசையும்
ராம்ஜியின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகளும் படத்திற்கு விறுவிறுப்பு
ஆக மொத்தத்தில்.............
கொஞ்சும் காதல் கொஞ்சம் காமெடி நிறைய திகில் காட்சிகளுடன் வெற்றிக் கோட்டை நெருங்கி தனி ஒருவனாக தனித்து நிற்கிறான் ஜெயம் ரவியின் தனி ஒருவன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |