மூடர் கூடம்,சூது கவ்வும் போன்ற டார்க் காமெடி படங்களில் நகைச்சுவை கொள்ளையர்களை கண்டு ரசித்த நமக்கு காதல் கலந்த நகைச்சுவை ரவுடியிசத்தை படம் காட்டி சிரிக்கவைக்கிறது....நானும் ரவுடிதான்
போலிஸ் பெண் அதிகாரி (ராதிகா)யின் மகனான பாண்டி (விஜய் சேதுபதி)க்கு சிறுவயது முதல் ரவுடிகள் மீது ஓர் ஈர்ப்பு
நண்பர்களுடன் சேர்ந்து சில சின்ன சண்டித்தனங்களில் மறைமுகமாக ஈடுபடும் பாண்டி காதுகேளாத காதாம்பரி (நயன்தாரா) யைக் கண்டதும் காதலால்...
தன் அம்மாவையும் அப்பாவையும் கொலை செய்த ரவுடி கிள்ளிவளவனைக் (பார்த்திபன்) தன் கையால் குத்தி கொலை செய்ய நினைக்கும் காதாம்பரிக்கு பாண்டி அவனது நண்பர்களுடன் சேர்ந்து உதவ முன்வருகிறார்
இதற்கிடையில் அரசியல் ரீதியாக கிள்ளிவளவனை கொலை செய்ய
மன்சூர் அலிகானும் முயற்சி செய்கிறார்
பாண்டி கிள்ளிவளவனைக் கொலை செய்து காதாம்பரியை காதலில் வென்றாரா...? என்பதை காதலும் நகைச்சுவையாகவும் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குனர் சந்தோஷ் சிவன்
வடிவேலுவின் நானும் ரவுடிதான் காமெடி வசனத்தை படத்தின் தலைப்பாக்கி .....
மறைமுகமாக இன்றைய சமுதாய சண்டியர்களையும் அரசியல் ரவுடிகளையும் தன் நையாண்டித் திரைக்கதையால் எள்ளி நகைக்கிறார் இயக்குனர்
பார்வையாளர்களை கடைசிவரை எதிர்பார்ப்பு நிலையில் திறம்பட கட்டிவைக்கிறார்
விஜய் சேதுபதி தனது மாறுபட்ட காமெடி நடிப்புக்கும் மேலாக காதல் கதாநாயகனுக்குள்ள பவ்வியத்தையும் காட்டி நடித்துள்ளார் அவரது மகன் சூர்யா இளவயது விஜய் சேதுபதியாக அறிமுகமாகியுள்ளார்
முகத்தில் நளினத்தையும் தோற்றத்தில் எளிமையையும் காட்டியுள்ளார் நயன்தாரா ஆனாலும் அவரது கதாப்பாத்திரத்தில் உள்ள பரிதாபம் அவரது நடிப்பில் தெரியவில்லை
பார்த்திபன் தனக்கே உரிய லொள்ளு வசனங்களுடன் வில்லனாக சிரிக்க வைக்கிறார் RJ பாலாஜியும் (தெறிக்கவிடலாமா?) நறுக் வசனங்களால் பளிச்சிடுகிறார் கொஞ்ச நேரமே வந்தாலும் நான் கடவுள் ராஜேந்திரன் குபீர் சிரிப்பு
அனிருத் பாடலும் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணை மற்றபடி உறுத்தல் இல்லை
ஆக மொத்தத்தில்........
நானும் ரவுடிதான்.......லாஜிக் ஓட்டைகளை மறந்துவிட்டு கொஞ்சம் காமெடியையும் கொஞ்சும் காதலையும் கண்டு ரசிக்கலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |