google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சொன்னதும் சொல்லாததும்

Tuesday, September 25, 2012

சொன்னதும் சொல்லாததும்




சொன்னது-
நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்றார் வைகோ.
சொல்லாதது-
யாரும் பதவிதான் தரமாட்டேன் என்கிறார்கள்.கூட்டணியில் கூடவா சேர்க்கக்கூடாது?.  
****************************************
சொன்னது-
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் குழு கூட்டம் பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
சொல்லாதது-
எனவே எதிர்கட்சிகளும் ஒரு மனதாவோ இரு மனதாவோ ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
**************************************



சொன்னது-
அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணலில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு திரண்டு சென்றனர். பின்பு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களின் கல்லறைகளின் முன் நின்று  ஜெபம் செய்து தங்களின் கோரிக்கைகளை முறையிட்டனர்.

சொல்லாதது-
உயிரோடு இருக்கிறவங்க கிட்ட முறையிட்டால் பிரயோசனமில்லைனு முடிவுபன்னிட்டாங்களா?
***********************************


சொன்னது-
திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
சொல்லாதது-
இதைவிடப் பெரிய விருது இல்லையா?  உலக ரத்னா.....?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1